Saturday 27 June 2020

இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா உறுதி : நடராஜர் தேர்த் திருவிழா ரத்து




இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா உறுதி : நடராஜர் தேர்த் திருவிழா ரத்து

தீட்சிதர்கள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேர்த் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சனம் விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்நிகழ்வில் கோயில் தீட்சிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று தேர்த் திருவிழா நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையில் கோயில் தீட்சிதர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவருக்குத் தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில், இன்று நடைபெற இருந்த தேர்த் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயில் முன்னர் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி :புதிய தலைமுறை

No comments:

Post a Comment