Saturday 30 November 2019

பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்புகள் திங்கட்கிழமை 10 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையா இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் எப்போது அரசு பள்ளி ஆசிரியருக்கு முக்கிய அறிவிப்பு

பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்புகள் திங்கட்கிழமை 10 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையா இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் எப்போது அரசு பள்ளி ஆசிரியருக்கு முக்கிய அறிவிப்பு



மத்திய அரசு இரண்டு அதிரடி அறிவிப்பு அமலுக்கு வரும் புதிய சட்டம் இனி தங்க நகைகளுக்கு இது கட்டாயம்

மத்திய அரசு இரண்டு அதிரடி அறிவிப்பு அமலுக்கு வரும் புதிய சட்டம் இனி தங்க நகைகளுக்கு இது கட்டாயம்



ஜியோ நிறுவனம் அடுத்த அதிரடி திட்டம் புதிய திட்டம் அறிமுகம் இனிய வாசிகளுக்கு இரண்டு மகிழ்ச்சியான செய்தி

ஜியோ நிறுவனம் அடுத்த அதிரடி திட்டம் புதிய திட்டம் அறிமுகம் இனிய வாசிகளுக்கு இரண்டு மகிழ்ச்சியான செய்தி



நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு




தொடர் மழை எதிரொலி தேசிய திறன் மேம்பாட்டு தேர்வு ஒத்திவைப்பு

தொடர் மழை எதிரொலி தேசிய திறன் மேம்பாட்டு தேர்வு ஒத்திவைப்பு



வடகிழக்கு பருவமழை தீவிரம் தமிழகத்தில் இரவில் கொட்டித்தீர்த்த மழை

வடகிழக்கு பருவமழை தீவிரம் தமிழகத்தில் இரவில் கொட்டித்தீர்த்த மழை



01-12-2019 இன்றைய தலைப்புச் செய்திகள்

01-12-2019 இன்றைய தலைப்புச் செய்திகள்



அரசுப்பள்ளிகளில் கம்ப்யூட்டர்- ஐ பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அரசுப்பள்ளிகளில் கம்ப்யூட்டர்- ஐ பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை


30.11.2019 அன்று நடைபெற்ற CEO அவர்களின் கூட்ட அறிவுரைகள்


தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்.

30.11.2019 அன்று நடைபெற்ற CEO அவர்களின் கூட்ட அறிவுரைகள்

இத்தகவல்களை உதவி ஆசிரியர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி கையொப்பம் பெற்று வைக்கப்பட வேண்டும். கீழ்க்கண்ட அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

1. காலை இறைவணக்கக் கூட்டத்திற்கு முன்பு 15 நிமி. மற்றும் பள்ளி நேரம் முடிந்த பின்பு 45 நிமிடங்கள் மாணவர்களுக்கு கூட்டு உடற்பயிற்சி, Sports, இசை, பாட்டு, நடனம், விளையாட்டு போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும்.

2. காலை மாலை இடைவேளையின்போது 1 நிமி. ஆசிரியர்களின் மேற்பார்வையில் மாணவர்கள் அனைவரும் தண்ணீர் அருந்த வேண்டும் (1 நிமி). தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னரே Restroom அனுப்ப வேண்டும். (இடைவேளை 10 நிமிடம் தான்)

3. இரண்டு வாரத்திற்கு ஒரு முறையேனும் CRC ஒருங்கிணைப்பாளர்கள் (HS/HSS, HMs) பள்ளியைப் பார்வையிட்டு வருகை, தரம் சோதிக்க வேண்டும்.  ஒரே வளாகத்தில் இயங்கும் பள்ளிகளில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பின் Acting Teacher அனுப்பவேண்டும்.

4. 2.12.2019 முதல் EMIS மூலம் Student Attendence, Staff attendence முழுமையாக பதிவு செய்யாதவர்கள் பெயர்ப் பட்டியல் அனுப்பப்பட்டு, அன்று மாலை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களை நேரில் சந்திக்க வேண்டும்.
(Partially Marked, Not Marked வரவே கூடாது).

5. சத்துணவு SMS கட்டாயம் அனுப்பப்பட வேண்டும்.

6. EMIS -ல் Time Table வாரந்தோறும் update செய்ய வேண்டும்.

7. EMIS ONE App - ல் உள்ள TNTP கட்டாயம் பயன்படுத்தி Videos, Pictures, TLM பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.  அதேபோல் DIKSHA app பயன்படுத்தியும் கற்பிக்க வேண்டும். மாணவர்களையும் பயன்படுத்தச் சொல்லவும். (எந்த ஆசிரியர் எத்தனை முறை பயன்படுத்தியுள்ளார் என்ற விபரம் கண்காணிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்).

9. சமுதாய பங்களிப்பு நிதி CSR portal மூலம் பள்ளியின் தேவைகளை upload செய்தால் Donors நிதியளிக்கவுள்ளனர். தேவைகளைப் பதிவிடவும். (IT-80G பிரிவின்கீழ் வரிச்சலுகைப் பெறலாம்).

10. ஆதார் இல்லாத குழந்தைகளுக்கு BRC யைத் தொடர்பு கொண்டு எடுக்கவும்.

11. அனைத்து ஆசிரியர்களுக்கும் Smart Card வழங்கப்படவுள்ளதால் EMIS - ல் உள்ள ஆசிரியர் விவரங்களை சரிபார்க்கவும். புதிய photo பதிவேற்ற வேண்டும்.

12. தினமும் தேர்வு 30 மதிப்பெண்களுக்கு வைத்து, திருத்தி, பெற்றோர் கையொப்பம் பெறப்படவேண்டும். இதில் சுணக்கம் இருக்கக் கூடாது.

* பள்ளிப் பார்வையின்போது சில பள்ளிகளில் த.ஆ.கூட்டத் தகவல்கள் மற்றும் HM WhatsApp Group செய்திகள் உதவி ஆசிரியர்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை எனத் தெரியவருகிறது.
இது தவிர்க்கப்பட வேண்டும்.

* EMIS ONE app இன்னும் install செய்யாமல் இருந்தால் நாளைக்குள் செய்து, திங்கள் முதல் நமது ஒன்றியம் 100% Staff attendence, Student attendenc, Noon Meal SMS முடித்துவிட வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.

த.ஆ.மற்றும் உ. ஆ. இருவரும் install செய்து பதிவு செய்யவும். இதில் யாருக்காவது ஒத்துழைப்பு இல்லை எனில் சார்ந்த வ.க.அலுவலரைத் தொடர்புகொள்ளவும்.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு டிசம்பர் 6 ந் தேதி முதல் ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு டிசம்பர் 6 ந் தேதி முதல் ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி







ஆங்கிலம் தெரியாத ஆங்கில ஆசிரியை கையும் களவுமாக பிடித்த மாவட்ட ஆட்சியர்

ஆங்கிலம் தெரியாத ஆங்கில ஆசிரியை கையும் களவுமாக பிடித்த மாவட்ட ஆட்சியர்





ஆங்கிலத்தில் சில வரிகள் கூட படிக்கத் தெரியாமல் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியை பணியாற்றி வந்தது .
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தின் சிகந்தர்பூர் சரௌஸி அரசுப் பள்ளியில் அம்மாவட்ட  ஆட்சியர் குமார் பாண்டே, யாரும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென கடந்த 28-ஆம் தேதி ஆய்வு நடத்தினர். மேலும் அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது,  அங்கிருந்த ஆங்கில ஆசிரியையிடம் 8-ஆம் வகுப்புக்கு ஆங்கிலப் புத்தகத்தை அளித்து வாசிக்க சொன்னார். ஆனால், சில வரிகளைக் கூட வாசிக்க இயலாமல் அந்த ஆசிரியை திணறினார். இதனால் கோபமடைந்த ஆட்சியர், அங்கிருந்த கல்வி அதிகாரிகளிடம் கூறியதாவது

01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயர வாய்ப்பு!

01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயர வாய்ப்பு!



மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வு குறியீட்டு எண்ணின் அடிப்படையில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்துவது வழக்கம்.

இதன்படி தற்போதைய விலைவாசி உயர்வு புள்ளிகளின் அடிப்படையில், 01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயரும் என கணிக்கப் பட்டுள்ளது.

4% அகவிலைப்படி உயர்வு உறுதியானால், தற்போது 17% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள், ஜனவரி முதல் 21% அகவிலைப்படி பெறுவார்கள்.

அரசு ஊழியர்களுக்கான, வருமான வரிக்கான கணக்கீடுகள் பிப்ரவரி மாதம் இறுதி செய்யப் படுவதால், இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் மார்ச் வரை நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் மாதம் முதல் ஊதியத்துடனும் வழங்கப் படும்.

மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அளித்ததும், அதனைப் பின்பற்றி மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும்.

எனினும், அகவிலைப்படி உயர்வு பற்றிய துல்லியமான கணக்கீடு ஜனவரி 31 ஆம் தேதி தான் தெரிய வரும்.

நாளை நடைபெற இருந்த NMMS தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

நாளை நடைபெற இருந்த NMMS தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது






விற்பனைக்கு வந்த காற்று விலை ரூபாய் 650

விற்பனைக்கு வந்த காற்று விலை ரூபாய் 650



மாலை நேர தலைப்புச்செய்திகள்

மாலை நேர தலைப்புச்செய்திகள்





ஆட்டோவில் லிப்ட் கொடுத்தால் எச்சரிக்கை முதியவர்களை குறிவைக்கும் நூதன கொள்ளையர்கள்

ஆட்டோவில் லிப்ட் கொடுத்தால் எச்சரிக்கை முதியவர்களை குறிவைக்கும் நூதன கொள்ளையர்கள்



உலக கோடிஸ்வரர்கள் பட்டியல்

உலக கோடிஸ்வரர்கள் பட்டியல்



இரண்டு நாட்களுக்கு தொடரும் மழை வானிலை மையம் கூறுவது என்ன?

இரண்டு நாட்களுக்கு தொடரும் மழை வானிலை மையம் கூறுவது என்ன?



அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்



தமிழக உள்துறை செயலாளராக எஸ் கே பிரபாகர் நியமனம்

தமிழக உள்துறை செயலாளராக எஸ் கே பிரபாகர் நியமனம்




ஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா?

ஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா?


`பல வகைகளில் அரசாங்கத்துக்கு வர வேண்டிய வரிப் பணம் சரிவர வருவதில்லை. இதனால் அரசாங்கம் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது.’

எல்லா நாடுகளுமே மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் தொழில் வளர்ச்சிக்காகவும் உலக வங்கி மற்றும் உள்நாட்டு வங்கிகளில் கடன் வாங்குவது வழக்கம்தான். கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்ள மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள கடன் நிலை ஆய்வறிக்கையை அலசினோம்.

இந்தியா இதுவரை எவ்வளவு கடன் வாங்கியுள்ளது..?

2010-11-ம் நிதியாண்டு முதல் இந்தியாவின் கடன் நிலை பற்றிய ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வறிக்கையின் 8-வது பதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அந்தப் பதிப்பில் இந்தியாவின் கடன் குறித்து தகவல் கிடைக்கிறது.

2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்திய அரசு 82,03,253 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. மேலும், அந்த ஆய்வறிக்கையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பொதுக் கடன் 51.7% அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மத்தியில், ஐ.நா சபை வெளியிட்ட மக்கள் தொகை கணக்குப்படி இந்தியாவின் மக்கள் தொகை 136.64 கோடி. இந்தியாவின் மொத்தக் கடன் 82,03,253 கோடி ரூபாய் என்றால், ஒவ்வொரு இந்தியக் குடிமகன் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது?

ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் தோராயமாக இருக்கும் கடன் தொகை 60,034 ரூபாய்.

மேலும், இந்த ஆய்வறிக்கைகளிலிருக்கும் சில தகவல்களைப் பார்ப்போம்... 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்தியாவின் மொத்தக் கடன் தொகை 54,90,763 கோடியாக இருந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 82,03,253 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த பிஞ்சு காயை அரைத்து தடவினால் சொட்டையிலும் முடி வளரும்!

இந்த பிஞ்சு காயை அரைத்து தடவினால் சொட்டையிலும் முடி வளரும்!


கூந்தல் உதிர்வது சாதரண பிரச்சனை என்றாலும் அதிலும் அளவோடு இருந்தால்தான் நல்லது. அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல் உங்கள் உடலில் உண்டான பாதிப்பையே உணர்த்துகிறது.

முடி உதிர்வு பருவத்திற்கு தகுந்தாற்போல் மாறினாலும், சிலருக்கு எப்போதுமே உதிர்ந்து கொண்டிருக்கும். இன்னும் சிலருக்கு கொத்து கொத்தாய் உதிரும். அது நல்லதல்ல. அப்படியே விட்டுவிட்டால் சொட்டை விழுந்துவிடும்.

மரபு ரீதியாக மட்டுமின்றி சிலருக்கு சரியாக பராமரிக்காமல் போனாலும் சொட்டை விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி முடி சொட்டையானவர்கள் இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை முயற்சிக்கலாம். எந்த பக்கவிளைவும் இல்லை. இவை சக்தி வாய்ந்த மூலிகைகள் என்பதால் நல்ல பலன்கள் தருகின்றன. அதோடு இங்கு சொல்லப்பட்டுள்ள அனைத்து மூலிகைகளும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஊமத்தைங்காய் :பிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளியுங்கள். இப்படி செய்தால் சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரும். வாரம் ஒரு நாள் கட்டாயம் செய்து பாருங்கள். தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு எல்லாம் மறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.

கருமையான முடி கிடைக்க :அவுரி இலை பொடி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் தவிர்க்கப்படாத ஒன்று. இது நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்காக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. அது கருமையாக மாற்றுவதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டும். அதனை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

அவுரி இலை
மருதாணி இலை.
செய்முறை:அவுரி இலையுடன், மருதாணி இலையை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் செம்பட்டை முடி கருமையாக மாறும்.

நரை முடி மறைய :கரிசலாங்கண்ணி நரை முடியை கருமையாக மாற்றும் அற்புத மூலிகையாகும். அதனை பயன்படுதும் முறையில் பயன்படுத்தினால்தான் அதனுடைய முழுப் பலனும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழச்சாறு.
கரிசலாங்கண்ணிச்சாறு.
பால்.
நல்லெண்ணெய்.
செய்முறை:எலுமிச்சை பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் எல்லாகற்றையும் சமமாக அரைலிட்டர் அளவு எடுத்து ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி ஆறு மாதத்திற்குமேல் தலைமுடியில் தேய்த்து வந்தால் நரை முடி குறையும்.

பொடுகு குறைய :செம்பருத்திப் பூ கூந்தலை அற்புதமாக வளரச் செய்யும். செம்பருத்தி, துளசி, வெட்டிவேர் கலந்த எண்ணெய் கூந்தலை நீண்டு வளரச் செய்யும் . மேலும் பொடுகை முழுவதும் கட்டுப்படுத்தும்.

செம்பருத்தி பூ.
துளசி விதை.
வெட்டிவேர்.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூவை நன்றாக காய வைத்து போட்டு அதனுடன் துளசி விதை மற்றும் வெட்டிவேர் இரண்டையும் சேர்த்து போட்டு நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.

அடர்த்தியாக வளர:பாதாமில் புரதம் இருப்பதால் அவை கூந்தலின் வளர்ச்சியை தூண்டும். அதோடு எலுமிச்சை சாறும் கலந்து பயன்படுத்துவதால் முடி அடர்த்தியாக வளரும்.

தேவையான பொருட்கள் :

பாதாம் பருப்பு.
எலுமிச்சைச்சாறு.
செய்முறை:10 பாதாம் பருப்பை எடுத்து 3 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு விட்டு நன்றாக அரைத்துக் கொள்லுங்கள். இதனை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.

பொடுகுத் தொல்லைக்கு :படிகாரம் சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்லது. கிருமிகளால் உருவாகும் சரும பற்றும் கூந்தல் பாதிப்பௌ குணப்படுத்தும். பூஞ்சைத் தோற்று மற்றும் பொடுகை முழுக்க கட்டுப்படுத்தும்.

தேவையான பொருட்கள்:

படிகாரம்
சீயக்காய்
செய்முறை:படிகாரத்தை 20 கிராம் எடுத்துப் பொடியாக்கி தண்ணீரில் கரைத்து தலையில் தேய்த்து ஒன்று அல்லது 2 மணி நேரம் சென்றபின் சீயக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை வராது

முடி நன்றாக செழித்து வளர :பூசணி கொடியி்ன் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு பிழிந்து அந்த சாற்றை முடி உதிர்ந்த இடத்தில் தடவி வந்தால் முடி வளரும். வாரம் இருமுறை செய்தால் அதன் பலன் இரட்டிப்பாகும்.

முடி உதிர்தல் நிற்க :முடி உதிர்வதை தடுக்க தேங்காய் பால் உதவுகிறது. கூந்தலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.

தேவையான பொருட்கள்:

வெந்தயம்.
தேங்காய்ப் பால்.
செய்முறை:வெந்தயத்தை எடுத்து தேங்காய் பாலில் நன்றாக ஊறவைக்க வேண்டும். பின்பு நன்றாக விழுதுப் போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.

கருமையாக முடி வளர :மாசிக்காய் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனை வாங்கி வாரம் 2 நாட்கள் பயன்படுத்துங்கள். பக்க விளைவுகளில்லாதது.

தேவையான பொருட்கள்:

மாசிக்காய்
பால்
செய்முறை:மாசிக்காயை எடுத்து பொடி செய்து அந்த தூளை தண்ணீர் அல்லது பாலில் குழைத்து தலை முடியில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலை முடி கருமையாக மாறும்.

அடர்த்தியாக வளர
தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை.
தயிர்.
செய்முறை:கறிவேப்பிலையை அரைத்து தயிருடன் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் குளிக்கவும். இவ்வாறி வாரம் இருமுறை செய்தால் முடி நல்ல அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

வாரம் ஒரு நாள் :மிளகிலேயே வால் மிளகு என்று கிடைக்கும் அதனை வாங்கி பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லையே இருக்காது, சிலருக்கு வெள்ளை வெள்ளையாக செதில் போக் உதிரும். அதனையும் இந்த குறிப்பு போக்கிவிடும்.

தேவையான பொருட்கள்:

வால் மிளகு.
நல்லெண்ணெய்.
செய்முறை:வால் மிளகை, நல்லெண்ணெயில் காய்த்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

கூந்தல் நீண்டு வளர:சப்பாத்திக் கள்ளி விஷம் என்று சொன்னாஅலும் அது விஷத்தை முறிக்கவும் பயன்படுகிறது. சப்பாத்திக் கள்ளி மருத்துவம் குணம் நிறைந்தவை. அதன் பூக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்:

சப்பாத்திக் கள்ளி பூக்கள்
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:சப்பாத்திக் கள்ளியின் சிவந்த பூக்களில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயில் அந்த சாறை கலந்து எண்ணெயை காய்ச்ச வேண்டும். இதனை தலையில் தேய்த்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.

வெங்காயம் :வெங்காயம் சொட்டை விழுந்த இடத்தில் முடியை வளரச் செய்யும் . இது நிறைய பேருக்கு பலனைத் தந்திருக்கிறது.

தேவையானவை :

வெங்காயம்.
செம்பருத்திப்பூ
செய்முறை:வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவி வர வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.

மரிக்கொழுந்து :மரிக்கொழுந்து இலையை புதிதாக பறித்து அரைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி வாரம் ஒரு நாள்: செய்து வந்தால் நாளடைவில் முடி கருமையாக மாறும்.

பொடுகு மறைய :வேப்பம் பூ பொடுகு, பேனை விரட்டும். அது கிருமிகளையும் அழிக்கும். சருமத்திற்கும் பயன்படுத்தலாம். கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.

செய்முறை:வேப்பம் பூவுடன் வெல்லத்தையும் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்தால் வர பொடுகு நீங்கும்

தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம்

தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம்





Friday 29 November 2019

01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாநில அளவிலான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத்திட்டத் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இத்தேர்வினை 151292 தேர்வர்கள் 533 தேர்வு மையங்களில் எழுதியுள்ளனர்.

01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாநில அளவிலான தேசிய வருவாய் வழி
மற்றும் திறன் படிப்புதவித் தொகைத்திட்டத் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில்
இத்தேர்வினை 151292 தேர்வர்கள் 533 தேர்வு மையங்களில் எழுதியுள்ளனர்.



30.11.2019 இன்றைய தலைப்புச் செய்திகள்

30.11.2019 இன்றைய தலைப்புச் செய்திகள்




ஒரு வாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பால் கலந்து 81 குழந்தைகளுக்கு கொடுத்த அதிர்ச்சி சம்பவம்

ஒரு வாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பால் கலந்து 81 குழந்தைகளுக்கு கொடுத்த அதிர்ச்சி சம்பவம்



பிஞ்சு குழந்தையோடு டூவீலரில் உணவு டெலிவரி செய்யும் இளம் தாய் குவியும் பாராட்டு

பிஞ்சு குழந்தையோடு டூவீலரில் உணவு டெலிவரி செய்யும் இளம் தாய் குவியும் பாராட்டு



இன்சூரன்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஜனவரி 2020 முதல் உங்கள் செலவுகள் அதிகரிக்கும்

இன்சூரன்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஜனவரி 2020 முதல் உங்கள் செலவுகள் அதிகரிக்கும்



தமிழக அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா?

தமிழக அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா?



Yono cash cardless without ATM use செய்வது எப்படி?

Yono cash cardless without ATM use செய்வது எப்படி?



Fast tag- வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை?

Fast tag- வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை?



தமிழகத்தில் அஞ்சல் துறையில் வேலை

தமிழகத்தில் அஞ்சல் துறையில் வேலை



டிசம்பர் 1 முதல் மக்களுக்கு அடித்தது ஜாக்பாட் செல்போன் டிவி முதல் மிக்ஸி வரை அட்டகாச 80% சதவிகிதம் தள்ளுபடி விலையில்

டிசம்பர் 1 முதல் மக்களுக்கு அடித்தது ஜாக்பாட் செல்போன் டிவி முதல் மிக்ஸி வரை அட்டகாச 80% சதவிகிதம் தள்ளுபடி விலையில்



பெட்ரோலுக்கு Bye-bye காட்டிய மின்சார ஆட்டோ?

பெட்ரோலுக்கு     Bye-bye காட்டிய மின்சார ஆட்டோ?



வாட்ஸ் ஆப் பாதுகாப்பானதா தணிக்கை செய்ய மத்திய அரசு முடிவு

வாட்ஸ் ஆப் பாதுகாப்பானதா தணிக்கை செய்ய மத்திய அரசு முடிவு



தமிழக பள்ளிகளின் நிலவரம் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழக பள்ளிகளின் நிலவரம் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்



இன்டர்நெட் பயன் படுத்துவோருக்கு கூகுளின் பகிங்கர எச்சரிக்கை!

இன்டர்நெட் பயன் படுத்துவோருக்கு கூகுளின் பகிங்கர எச்சரிக்கை!



TN EMIS APP ல் பெற்றோர்களுக்கு SMS அனுப்பும் வசதியா?

TN EMIS APP ல் பெற்றோர்களுக்கு SMS அனுப்பும் வசதியா?




அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்.

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்.








Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN Schools Attendance App மூலம் தினசரி பதிவு செய்யப்பட்டு வருதல் – இனிவரும காலங்களில் மாணவர்களின் வருகைப் பதிவினை TN-EMIS App மூலம் வருகைப்பதிவு செய்யக் கோருதல் சார்பாக கீழே இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TN-EMIS App பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு

https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools


முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்.

EMIS- (EMIS ONE) TN EMIS APP காலையில் மட்டும் பதிவு செய்கிற வசதி கொடுக்கப் பட்டுள்ளது பிற்பகல் பதிவு செய்யப்படுகின்ற வசதி இல்லை.

*EMIS- (EMIS ONE) TN EMIS APP காலையில் மட்டும் பதிவு செய்கிற வசதி கொடுக்கப் பட்டுள்ளது பிற்பகல் பதிவு செய்யப்படுகின்ற வசதி இல்லை.*


Thursday 28 November 2019

தமிழக தபால் துறையில் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக தபால் துறையில் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு



28 -11-2020 இன்று உதயமானது இரண்டு புதிய மாவட்டங்கள் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

28 -11-2020 இன்று உதயமானது இரண்டு புதிய மாவட்டங்கள் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்



5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு



தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை



ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் அறிவிப்பு

ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் அறிவிப்பு



வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு அறிவிப்பு

வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு அறிவிப்பு



EMIS - EMIS ONE (TN EMIS) APP ல் student attendance எவ்வாறு பதிவது? விளக்கம்!!!

EMIS - EMIS ONE (TN EMIS) APP ல் student attendance எவ்வாறு பதிவது? விளக்கம்!!!




 (New version)
         28-11-2019

இனிமேல் இந்த APP மூலமாகத்தான் மாணவர்களுடைய வருகை பதிவு செய்ய வேண்டும்!!!

EMIS ONE APP (TN EMIS )PLAY STORE LINK - DOWNLOAD


https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools


..

Wednesday 27 November 2019

அமைச்சர் செங்கோட்டையன் 27.11.2019 அன்று வெளியிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகள் !!

அமைச்சர் செங்கோட்டையன் 27.11.2019 அன்று வெளியிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகள் !!


சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வழங்குவதற்கான ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகத்தை அமைச்சர் வெளியிட்டார்.

*அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறுகையில்,* பள்ளிகளின் மேம்பாட்டுக்காக, மாணவர்களின் வளர்ச்சிக்காக வாங்கப்பட்ட பொருட்கள், மின்னணு சாதனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் முடக்கி வைத்திருப்பது ஏன்? கல்வி அலுவலர்கள், தங்களது பணியை ஒழுங்காக செய்தாலே, தமிழகம் பள்ளிக்கல்வியில் முதலிடத்துக்கு வந்துவிடும்.

கல்வி அலுவலர்களின் பணியைக் கண்காணிக்கவே ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதைத் தடுக்க, முதன்மைக்கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்து உரிய கவனம் செலுத்த வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கும் விரைவில் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

5 ஆண்டுகளுக்கு முன், தொடப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன என்பதைத் தயார் செய்ய வேண்டும். 5 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும். பட்டியல் தயாரிப்பதில், முதன்மைக்கல்வி அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும்.

மாணவர்களின் கற்றல் திறனைப் பொறுத்தவரை தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டில் முதலிடத்துக்கு வருவதற்கான முயற்சிகளை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரை திட்டப்பணிகள் அனைத்தும் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது.

அரசின் திட்டப்பணிகள் சரியாக அனைத்துப்பள்ளிகளுக்கும் சென்றடைந்துள்ளதா என்பதை பள்ளிக்கல்வி செயலாளரும், ஆணையரும் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும் இலவச புத்தகங்கள், சீருடைகள் சரியாக கிடைத்துள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் தேங்கியுள்ள பழைய பாடப்புத்தகங்களை தமிழ்நாடு காகிதம் மற்றும் செய்தித்தாள் நிறுவனத்துக்கு ( TNPL ) அனுப்பி வைக்க வேண்டும்.

இருக்கைகள், மேசைகள் சேதமடைந்தால், அவற்றை சரிசெய்து மீண்டும் உபயோகத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினால் ரூ.20 கோடிக்கான கட்டமைப்பு செலவினங்கள் அரசுக்கு மிச்சமாகும். மேலும் பள்ளிகளில் பராமரிப்பில்லாத கட்டிடங்களை இடிக்கவும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் உள்ளது. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை முதன்மைக்கல்வி அலுவலர்கள் அழைத்து அடிக்கடி ஆலோசிக்க வேண்டும்.

அரசுப்பள்ளிகளில் படித்து நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்களுக்கு கடிதம் எழுதி, பள்ளிகளுக்கு உதவுமாறு மாணவர்களுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும். இவ்வாறு, முன்னாள் மாணவர்கள் உதவினால், அரசுப்பள்ளிகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

அரசு செலவில் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பள்ளிகளுக்கு வாங்கி அனுப்பப்பட்டுள்ளன. அரசுப்பள்ளிகளில் கணினி உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், ஆசிரியைகளின் சேலையைக் கொண்டு மின்னணு சாதனங்களை மூடி வைத்துள்ளனர். இதுபோல் 2,000 கணினிகள் அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதில் எதை பயன்படுத்த முடியுமோ, அவற்றை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ 2,400 கோடி செலவில் குக்கிராமங்களில் கூட இணைய வசதி கிடைக்கும் வகையில் தொழில்நுட்பத்துறை சார்பில் 2020 ஜனவரி முதல் பிப்ரவரிக்குள் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் CCTV சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் CCTV பொருத்தப்பட்டுள்ளதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

*அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,* ரூ.26.40 கோடி செலவில் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் இசை, ஓவியம், நடனப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், இசை, ஓவியம் மற்றும் நடனப்பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் Skill Training பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 500 ஆடிட்டர்கள் மூலம் பட்டயக்கணக்காளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படும்.

ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியர் கலந்தாய்வின் போது, விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்காததால், தரையில் விழுந்து புரண்ட ஆசிரியரின் செயல் ஒழுக்கத்துக்கு மாறானது. எனவே முதற்கட்டமாக 17- பி பிரிவின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என திண்டுக்கல் மாவட்ட தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் குறித்து அமைச்சர் விளக்கம்.

அதேபோல் 5-க்கும் குறைவாக மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள். இதற்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை அரசுக்கு செலவாகிறது. இதன் காரணமாக, 5 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் பள்ளிகளை கணக்கெடுத்து, அவற்றை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம், கணிதப்பாடங்களுக்கு ஒரே மாதிரியான வினாத்தாளை தேர்வுத்துறை தயாரித்து அனுப்பும். முதல் 3 ஆண்டுகளுக்கு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும். 5-ம் வகுப்புக்கு 3 பாடங்களுக்கும், 8-ம் வகுப்புக்கு 5 பாடங்களுக்கும் பொதுத்தேர்வு அவரவர் பள்ளியிலேயே எழுதலாம் எனவும் கூறினார்.

அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதன்பின் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

முன்னாள் மாணவர்கள், சமூக தொண்டு நிறுவனங்கள் அரசுப்பள்ளிகளுக்கு நிதி வழங்கலாம். வெளிநாடுகளில் வசிப்போர் நிதி வழங்குவதுடன், அவர்கள் வழங்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு நபரையும் நியமிக்கலாம். இதுவரை, தனியார் நிறுவனங்கள் மூலம் ரூ.128 கோடி அரசுப்பள்ளிகளுக்கு நிதியாக வந்துள்ளது.

5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்; 5-ம் வகுப்புக்கு 3 பாடங்கள், 8-ம் வகுப்புக்கு 5 பாடங்கள் என்கிற விதத்தில் நடக்கவுள்ள பொதுத்தேர்வை மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே எழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

*ஒவ்வொரு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் ஒரு மாதத்துக்கு குறைந்தது 20 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டக்கல்வி அலுவலர் 30 பள்ளிகளையும், வட்டாரக்கல்வி அலுவலர் 60 பள்ளிகளையும் ஒரு மாதத்துக்கு ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார் !!!.
Dear All,

The new app for marking attendance has been launched and is available in the Play store in the following link. Please use this app from tomorrow onwards to mark student attendance.Attendance marked through this app only will reflect in the reports.





Download link:

https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools

பெற்றோர் - ஆசிரியர் சங்கம் கலைக்க அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு


பெற்றோர் - ஆசிரியர் சங்கம் கலைக்க அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு




மாணவர்களின் பாதுகாவலர் என்ற போலி அடையாளத்துடன், நிர்வாக பதவிகளில் உள்ள, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தை, உடனடியாக கலைக்க வேண்டும்' என, அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, சென்னையில் நடந்த, முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் கூட்டத்தில், அவர் பிறப்பித்த உத்தரவு:பெற்றோர் - ஆசிரியர் கழகம் என்பது, பள்ளிகளின் முன்னேற்றம், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் செயல்பட வேண்டும். ஆனால், பல பள்ளிகளில், பல ஆண்டுகளாக, ஒரு சிலரே இந்த பொறுப்புகளில் உள்ளனர்.
எவ்வளவு வயதானாலும், சிலர் தங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழக பதவியில் உள்ளனர். ஏதாவது ஒரு மாணவருக்கு பாதுகாவலராக இருப்பதுபோல் காட்டி, பொறுப்பில் உள்ளனர். இந்த பொறுப்பில் இருப்பதால், தினமும் பள்ளிக்கு வருவது, அங்கு பள்ளியின்செலவில், டீ குடிப்பது, சாப்பிடுவது உட்பட, சுய தேவைகளை பார்த்து கொள்கின்றனர். இந்த பதவியை காட்டி, தங்களின் சுய அலுவல்களுக்கு தேவையானவர்களை, பள்ளிக்கு வர செய்து,சந்தித்து பேசுகின்றனர். ஆசிரியர்களுக்கு தேவையான இடங்களில் கையெழுத்து போட்டு கொடுக்கின்றனர்; பின், வீட்டுக்கு செல்கின்றனர்.
இப்படிப்பட்ட சங்க நிர்வாகிகளை வைத்து, பள்ளியை அடுத்த நிலைக்கு, எப்படி கொண்டு செல்ல முடியும்? பெற்றோர் - ஆசிரியர் கழக விதிகளின்படி, தற்போது படிக்கும் மாணவரின் பெற்றோரே, பொறுப்பில் இருக்க வேண்டும். இதை, கட்டாயம் பள்ளிகள் பின்பற்ற வேண்டும். பாதுகாவலர் என்ற போர்வையில் உள்ளவர்களை நீக்கி, அந்த நிர்வாகத்தை கலைத்து விடுங்கள். தகுதியானவர்களை நிர்வாகிகளாக வைத்து, புதிய நிர்வாகம் ஏற்படுத்துங்கள். பள்ளியின் வளர்ச்சிக்கு, அவர்களை பயன்படுத்துங்கள்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் ஆணையர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் ஆணையர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்



வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு

வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு



நள்ளிரவு முதல் வேலூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை நேரடி காட்சிகள்

நள்ளிரவு முதல் வேலூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை நேரடி காட்சிகள்






புதிய மாவட்டமாக உருவாகும் திருப்பத்தூர் குறித்த சிறப்பு தொகுப்பு

புதிய மாவட்டமாக உருவாகும் திருப்பத்தூர் குறித்த சிறப்பு தொகுப்பு



இன்று 28-11-2019 வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு

இன்று  28-11-2019 வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு







20 கர்ப்பிணிகளை காப்பாற்றிய அஞ்சலி

20 கர்ப்பிணிகளை காப்பாற்றிய அஞ்சலி



சுவிட்சர்லாந்தில் பனிப்பொழிவு வெள்ளமாக ஓடும் பனிக்கட்டிகள்

சுவிட்சர்லாந்தில் பனிப்பொழிவு வெள்ளமாக ஓடும் பனிக்கட்டிகள்



கூடைப்பந்து விளையாட்டில் சிங்க பெண்களை உருவாக்கும் நபர்

கூடைப்பந்து விளையாட்டில் சிங்க பெண்களை உருவாக்கும் நபர்




அடுத்த சந்திராயன் 3 விண்கலம் எப்போது இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்

அடுத்த சந்திராயன் 3 விண்கலம் எப்போது இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்



ராணிப்பேட்டை மாவட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தின் சிறப்பு அம்சங்கள்



தமிழக அரசு சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு



தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு




தமிழக அரசு ஆவின் பால் துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு ஆவின் பால் துறையில் வேலைவாய்ப்பு




ரூபாய் ஆயிரம் கோடியில் ஜொலிக்கும் கோவை ஸ்மார்ட் சிட்டி

ரூபாய் ஆயிரம் கோடியில் ஜொலிக்கும் கோவை ஸ்மார்ட் சிட்டி



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எவ்வளவு மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எவ்வளவு மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு




தமிழக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பின்லாந்து கல்விக்குழு

தமிழக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பின்லாந்து கல்விக்குழு




5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்; 5-ம் வகுப்புக்கு 3 பாடங்கள், 8-ம் வகுப்புக்கு 5 பாடங்கள் என்கிற விதத்தில் நடக்கவுள்ள பொதுத்தேர்வை மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே எழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்; 5-ம் வகுப்புக்கு 3 பாடங்கள், 8-ம் வகுப்புக்கு 5 பாடங்கள் என்கிற விதத்தில் நடக்கவுள்ள பொதுத்தேர்வை மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே எழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வழங்குவதற்கான ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகத்தை அமைச்சர் வெளியிட்டார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறுகையில், பள்ளிகளின் மேம்பாட்டுக்காக, மாணவர்களின் வளர்ச்சிக்காக வாங்கப்பட்ட பொருட்கள், மின்னணு சாதனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் முடக்கி வைத்திருப்பது ஏன்? கல்வி அலுவலர்கள், தங்களது பணியை ஒழுங்காக செய்தாலே, தமிழகம் பள்ளிக்கல்வியில் முதலிடத்துக்கு வந்துவிடும்.

கல்வி அலுவலர்களின் பணியைக் கண்காணிக்கவே ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதைத் தடுக்க, முதன்மைக்கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்து உரிய கவனம் செலுத்த வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கும் விரைவில் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

5 ஆண்டுகளுக்கு முன், தொடப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன என்பதைத் தயார் செய்ய வேண்டும். 5 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும். பட்டியல் தயாரிப்பதில், முதன்மைக்கல்வி அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும்.

மாணவர்களின் கற்றல் திறனைப் பொறுத்தவரை தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டில் முதலிடத்துக்கு வருவதற்கான முயற்சிகளை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரை திட்டப்பணிகள் அனைத்தும் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது.

அரசின் திட்டப்பணிகள் சரியாக அனைத்துப்பள்ளிகளுக்கும் சென்றடைந்துள்ளதா என்பதை பள்ளிக்கல்வி செயலாளரும், ஆணையரும் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும் இலவச புத்தகங்கள், சீருடைகள் சரியாக கிடைத்துள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் தேங்கியுள்ள பழைய பாடப்புத்தகங்களை தமிழ்நாடு காகிதம் மற்றும் செய்தித்தாள் நிறுவனத்துக்கு ( TNPL ) அனுப்பி வைக்க வேண்டும்.

இருக்கைகள், மேசைகள் சேதமடைந்தால், அவற்றை சரிசெய்து மீண்டும் உபயோகத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினால் ரூ.20 கோடிக்கான கட்டமைப்பு செலவினங்கள் அரசுக்கு மிச்சமாகும். மேலும் பள்ளிகளில் பராமரிப்பில்லாத கட்டிடங்களை இடிக்கவும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் உள்ளது. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை முதன்மைக்கல்வி அலுவலர்கள் அழைத்து அடிக்கடி ஆலோசிக்க வேண்டும்.

அரசுப்பள்ளிகளில் படித்து நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்களுக்கு கடிதம் எழுதி, பள்ளிகளுக்கு உதவுமாறு மாணவர்களுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும். இவ்வாறு, முன்னாள் மாணவர்கள் உதவினால், அரசுப்பள்ளிகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

அரசு செலவில் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பள்ளிகளுக்கு வாங்கி அனுப்பப்பட்டுள்ளன. அரசுப்பள்ளிகளில் கணினி உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், ஆசிரியைகளின் சேலையைக் கொண்டு மின்னணு சாதனங்களை மூடி வைத்துள்ளனர். இதுபோல் 2,000 கணினிகள் அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதில் எதை பயன்படுத்த முடியுமோ, அவற்றை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ 2,400 கோடி செலவில் குக்கிராமங்களில் கூட இணைய வசதி கிடைக்கும் வகையில் தொழில்நுட்பத்துறை சார்பில் 2020 ஜனவரி முதல் பிப்ரவரிக்குள் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் CCTV சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் CCTV பொருத்தப்பட்டுள்ளதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ரூ.26.40 கோடி செலவில் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் இசை, ஓவியம், நடனப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், இசை, ஓவியம் மற்றும் நடனப்பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் Skill Training பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 500 ஆடிட்டர்கள் மூலம் பட்டயக்கணக்காளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படும்.

ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியர் கலந்தாய்வின் போது, விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்காததால், தரையில் விழுந்து புரண்ட ஆசிரியரின் செயல் ஒழுக்கத்துக்கு மாறானது. எனவே முதற்கட்டமாக 17- பி பிரிவின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என திண்டுக்கல் மாவட்ட தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் குறித்து அமைச்சர் விளக்கம்.

அதேபோல் 5-க்கும் குறைவாக மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள். இதற்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை அரசுக்கு செலவாகிறது. இதன் காரணமாக, 5 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் பள்ளிகளை கணக்கெடுத்து, அவற்றை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம், கணிதப்பாடங்களுக்கு ஒரே மாதிரியான வினாத்தாளை தேர்வுத்துறை தயாரித்து அனுப்பும். முதல் 3 ஆண்டுகளுக்கு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும். 5-ம் வகுப்புக்கு 3 பாடங்களுக்கும், 8-ம் வகுப்புக்கு 5 பாடங்களுக்கும் பொதுத்தேர்வு அவரவர் பள்ளியிலேயே எழுதலாம் எனவும் கூறினார்.

அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதன்பின் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

முன்னாள் மாணவர்கள், சமூக தொண்டு நிறுவனங்கள் அரசுப்பள்ளிகளுக்கு நிதி வழங்கலாம். வெளிநாடுகளில் வசிப்போர் நிதி வழங்குவதுடன், அவர்கள் வழங்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு நபரையும் நியமிக்கலாம். இதுவரை, தனியார் நிறுவனங்கள் மூலம் ரூ.128 கோடி அரசுப்பள்ளிகளுக்கு நிதியாக வந்துள்ளது.

ஒவ்வொரு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் ஒரு மாதத்துக்கு குறைந்தது 20 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டக்கல்வி அலுவலர் 30 பள்ளிகளையும், வட்டாரக்கல்வி அலுவலர் 60 பள்ளிகளையும் ஒரு மாதத்துக்கு ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார்.

சோதனைச் சாவடிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ள fast tag பயன்படுத்தும் முறை எப்படி

சோதனைச் சாவடிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ள fast tag பயன்படுத்தும் முறை எப்படி?




மாணவர்களுக்கு இசை ஓவியம் நடனப் பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

மாணவர்களுக்கு இசை ஓவியம் நடனப் பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.


பள்ளி மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை மேற்பார்வையிட ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளி மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை மேற்பார்வையிட ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

.

ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இல்லை என்று நான் சொல்லவில்லை அமைச்சர் செங்கோட்டையன்

ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இல்லை என்று நான் சொல்லவில்லை அமைச்சர் செங்கோட்டையன்




போராட்டத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை சரியானதுதான்

போராட்டத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை சரியானதுதான்



பொங்கல் பரிசு 29ஆம் தேதி தொடக்கம்

பொங்கல் பரிசு 29ஆம் தேதி தொடக்கம்




பி எஸ் எல் வி சி 47 ராக்கெட் பற்றி நீங்கள் அறிய வேண்டியது

பி எஸ் எல் வி சி 47 ராக்கெட் பற்றி நீங்கள் அறிய வேண்டியது





வாழத் தகுதியற்றதாக மாறுகிறதா பூமி


வாழத் தகுதியற்றதாக மாறுகிறதா பூமி




அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி



14 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி எஸ் எல் வி சி-47 ராக்கெட்.

14 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி எஸ் எல் வி சி-47 ராக்கெட்.



பள்ளி கல்வி துறைக்கு புதிய கட்டடம்!

பள்ளி கல்வி துறைக்கு புதிய கட்டடம்!


பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு, 1.23 லட்சம் சதுர அடியில், புதிய கட்டடம் கட்டும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு மாதங்களில் கட்டடத்தை திறக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி இயக்குனரகம், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படுகிறது. இந்த வளாகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பாடநுால் கழகம், அரசு தேர்வு துறை இயக்குனரகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், பள்ளி கல்வி இயக்குனரக கட்டடம், 100 ஆண்டுகள் பழமையானது என்பதால், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, டி.பி.ஐ., வளாகத்தில் காலியாக இருந்த, 1.23 லட்சம் சதுரடி இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில், 40 கோடி ரூபாயில், ஆறு மாடிகள் உடைய புதிய கட்டடம் கட்டும் பணி, 2018 மார்ச்சில் துவங்கியது. இந்த கட்டட பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரியில் கட்டடத்தை திறக்க, பள்ளி கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. டி.பி.ஐ.,வளாகத்தில் உள்ள பாரம்பரிய கட்டடத்தை போல, புதிய கட்டடத்துக்கு சிவப்பு வண்ணம் பூசப்பட்டு, இறுதி கட்ட பணி நடந்து வருகிறது. இந்த கட்டடத்தில், பள்ளி கல்வி இயக்குனரகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை செயல்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்

ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!

ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!




இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டு பேசினார்.

அவரது அறிவிப்பு!!

#ஆசிரியர்கள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். கலந்தாய்வில்
தரையில் படுத்து உருண்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

#முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஒழுங்காக நடந்து கொண்டாலே தமிழகம் கல்வியில் முன்னிலை பெற்றுவிடும்.

#₹26.40 கோடி செலவில் மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த நடவடிக்கை.

#இசை,ஓவியம்,நடன பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

# 5 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த நடவடிக்கை.

சென்ற ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் (2019-20) உள்ள வருமான வரி மாற்றங்கள்!!

சென்ற ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் (2019-20) உள்ள வருமான வரி மாற்றங்கள்!


1. Standard Deduction
சென்ற ஆண்டு-40,000
இந்த ஆண்டு-50,000

2. Section 87A
சென்ற ஆண்டு-₹ 2500
இந்த ஆண்டு-₹ 12500

குறிப்பு:
Taxable Income என்பது உங்கள் மொத்த ஆண்டு வருவாயில் HRA, Prof.Tax, LIC Premium, NHIS தொகை என அனைத்தும் கழிக்கப்பட்டு வரும் மீத தொகையாகும்

சம்பளதாரர்களுக்கான வருமான வரி விபரம்-FY 2019-20
Taxable Income 5 லட்சமும் அதற்குக் குறைவாகவும் பெறும் சம்பளதாரர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை

Taxable Income 5 லட்சத்தைத் தாண்டுபவர்கள் கீழ்க்காணும் வகையில் வரிப்பிடித்தம் செய்யப்படும்.
0 to 2.5 lakh-0%
2.5 to 5 lakh-5%

5 to 10 lakh-20%
10 lakh above-30%

மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.



Tuesday 26 November 2019

சென்ற ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் (2019-20) உள்ள வருமான வரி மாற்றங்கள்!!

சென்ற ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் (2019-20) உள்ள வருமான வரி மாற்றங்கள்!!




1. Standard Deduction
சென்ற ஆண்டு-40,000
இந்த ஆண்டு-50,000

2. Section 87A
சென்ற ஆண்டு-₹ 2500
இந்த ஆண்டு-₹ 12500

குறிப்பு:
Taxable Income என்பது உங்கள் மொத்த ஆண்டு வருவாயில் HRA, Prof.Tax, LIC Premium, NHIS தொகை என அனைத்தும் கழிக்கப்பட்டு வரும் மீத தொகையாகும்

*சம்பளதாரர்களுக்கான வருமான வரி விபரம்-FY 2019-20*
Taxable Income 5 லட்சமும் அதற்குக் குறைவாகவும் பெறும் சம்பளதாரர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை

Taxable Income 5 லட்சத்தைத் தாண்டுபவர்கள் கீழ்க்காணும் வகையில் வரிப்பிடித்தம் செய்யப்படும்.
0 to 2.5 lakh-0%
2.5 to 5 lakh-5%

5 to 10 lakh-20%
10 lakh above-30%

மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.



இன்று விண்ணில் பாய்கிறது பி எஸ் எல் வி -சி 47 ராக்கெட்

இன்று விண்ணில் பாய்கிறது பி எஸ் எல் வி -சி 47 ராக்கெட்




இன்றைய தலைப்புச் செய்திகள் 27.11.2019

இன்றைய தலைப்புச் செய்திகள் 27.11.2019





மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை கீழ்கண்ட காணொளி செயலி மூலமாக மட்டும் பதிவு செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அதுவரை தற்போதைய நடைமுறையையே பின்பற்றப்பட வேண்டும். தற்பொழுது அந்த செயலியை எப்படி கையாளுவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.நடைமுறைக்கு வருகிற பொழுது அதை முழுமையாக பயன் படுத்திக் கொள்ளலாம்.


மாணவர்கள், ஆசிரியர்களின்  வருகைப் பதிவேட்டை கீழ்கண்ட காணொளி  EMIS one app    செயலி மூலமாக மட்டும் பதிவு செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அதுவரை  தற்போதைய நடைமுறையையே பின்பற்றப்பட வேண்டும்.
தற்பொழுது அந்த செயலியை எப்படி கையாளுவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.நடைமுறைக்கு வருகிற பொழுது அதை முழுமையாக பயன் படுத்திக் கொள்ளலாம்..




ஆசிரியர்கள் செல்போன்களில் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிப்பாதாக எழும் குற்றச்சாட்டுகளை தவிர்க்க வழிமுறைகள்

ஆசிரியர்கள் செல்போன்களில் சமூக வலைதளங்களில் அதிக
நேரம் செலவழிப்பாதாக எழும் குற்றச்சாட்டுகளை தவிர்க்க வழிமுறைகள்:




1.        ஆசிரியர்கள் காலை 8:30 முதல் 10:30 வரையிலும் அசிரியர் & மாணவர் ஆன்லைன் வருகைப்பதிவேடுகளில்  நேரம் செலவிடுவதை வெளியிலிருந்து பார்போருக்கு அப்படிதான் தெரியும். எனவே ஆன்லைன் ஆப் மூலம் வருகைப்பதிவேடு முறையை தவிர்க்கலாம் அல்லது சர்வர் குறைபாட்டை நீக்கி விரைவாக செயல்படச் செய்யலாம்.

2.        பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினியில் மட்டுமே (கைபேசி ஆப் நிறுத்தப்பட்டு) வருகைப்பதிவேடு செய்ய ஆவன செய்யலாம். இணைய வசதி பள்ளியில் செய்து தரும் பட்சத்தில் ஆசிரியர்கள் தங்கள் கைப்பேசியை, மொபைல் இண்டர்னெட் வசதியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

3.        துறை ரீதியான அறிவிப்புகள் வழிகாட்டுதல்கள் மற்றும் நெரிமுறைகளை EMIS தளத்தின் மூலம் மட்டுமே பகிரப்பட வேண்டும், அல்லது பள்ளி ஈ.மெயில் மூலம் மட்டுமே அனுப்ப பட வேண்டும்

4.        அலுவலக அறிவிப்புகள் வாட்ஸ் ஆப் மூலம் பகிரப்படுவது நிறுத்தப்பட்டு, வழங்கப்பட்டுள்ள மடிக்கணினியில் ஈ.மெயில் மூலம் மட்டுமே அனுப்ப பட வேண்டும்.

5.        மாணவர்களின் வருகையை கண்காணிக்க விரல் ரேகை பதிவேடு முறையை நடைமுறைப்படுத்த அரசிற்கு ஏற்படும்  நிதிச் செலவைக் குறைக்க மொபைல் ஆப் பயன்படுத்த சொல்லி ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

6.        EMIS தளத்தில் தரவுகளை உள்ளிடுதல் data entry works வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுனர்களைக் கொண்டு செய்து முடிக்கலாம் அல்லது , தற்காலிக data entry operator பணியிடங்களை தோற்றுவிக்கலாம்.

7.        பள்ளியிலேயே இணைய வசதி செய்து அனைத்து ஆன்லைன் பணிகளையும் மடிக்கணினி மூலம் மட்டுமே அனுமதிக்கும் பட்சத்தில் ஆசிரியர்களின் கைப்பேசி உபயோகம் முழுமையாக குறைக்கப்படும்.

8.        கற்றல் கற்பித்தல் TLM , பயிற்ச்சித்தாள்கள், கையேடுகள் , மாதிரி வினாத்தாள்கள் போன்றவை பல ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்களால், சமூக வலைதளங்களின் மூலம் பகிரப்படுகின்றன, அவற்றை தொகுத்து முறைப்படுத்தி அரசின் அதிகாரப்பூர்வமான தளங்கள் மூலம் பகிரலாம், ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் இன்றியமையாததாகும்

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பின்லாந்து குழு சிறப்புப் பயிற்சி

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பின்லாந்து குழு சிறப்புப் பயிற்சி




ஆசிரியர்களுக்கு பின்லாந்து நிபுணர்கள் பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பின்லாந்து நாட்டின் நிபுணர்கள் வாயிலாக, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக பள்ளி கல்வி துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஏற்கனவே புதிய பாட திட்டம், தேர்வு முறையில் மாற்றம் போன்றவை அமலுக்கு வந்துள்ளன. புதிய பாட திட்டத்தின் படி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டமும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. துவக்கம்இந்த வரிசையில், அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் திறன்களை மையப்படுத்தி, கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் வகையில், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, பின்லாந்து நாட்டில் இருந்து, நான்கு பேர் குழுவினர், சென்னைக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர்.

பின்லாந்து குழுவினரின் சிறப்பு பயிற்சி வகுப்பு, பள்ளி கல்வி இயக்குனரகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று துவங்கியது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, 'பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்' வழியாக, பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகளை படிப்படியாக, மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.ஆலோசனைதமிழக பள்ளி கல்வி துறையில், நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக, புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த பதவியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப் பட்டுள்ளார்.கடந்த வாரம் பள்ளி கல்வி கமிஷனர் பொறுப்பேற்ற நிலையில், அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன், இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டம், அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில் காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலர் பிரதீப் யாதவ் மற்றும் பள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.மேலும், பள்ளி கல்வி துறையின் இயக்குனர்கள், இணை இயக்குனர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், பள்ளி கல்வியின் தர மேம்பாடு, புதிய பாட திட்ட பயிற்சி, பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவது, மத்திய - மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளது.

அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு என்னென்ன இருக்கும்


அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு என்னென்ன இருக்கும்



சென்னையில் குப்பையை அல்ல வருகிறது பேட்டரி வாகனங்கள்


சென்னையில் குப்பையை அல்ல வருகிறது பேட்டரி வாகனங்கள்.






4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் வானிலை மையம்

4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் வானிலை மையம்.



Mobile Network இல்லாத காரணத்தால் Attendance பதிவு செய்யவில்லை இந்த பள்ளிகள் ஆப்லைனில் Attendance பதிவு செய்து பின்னர் நெட்ஒர்க் கிடைக்கும் போது அல்லது மாலை 4 மணிக்கு மேல் நெட்ஒர்க் பகுதிக்கு வந்த பிறகு ஆன்லைனுக்கு Synchronization செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் அளிக்க BRTE கள் மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Mobile Network இல்லாத காரணத்தால் Attendance பதிவு செய்யவில்லை.





இந்த பள்ளிகள் ஆப்லைனில் Attendance பதிவு செய்து  பின்னர் நெட்ஒர்க் கிடைக்கும் போது அல்லது மாலை 4 மணிக்கு மேல் நெட்ஒர்க் பகுதிக்கு வந்த பிறகு ஆன்லைனுக்கு Synchronization
செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் அளிக்க BRTE கள் மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாநில தகவல் மேலாண்மை(EMIS)
சென்னை