Sunday 31 May 2020

"கொரோனா பாதிப்பு குறைந்த உடன் கோவில்கள் திறப்பு"- மாண்புமிகு அமைச்சர் செல்லூர் ராஜு காணொளி



"கொரோனா பாதிப்பு குறைந்த உடன் கோவில்கள் திறப்பு"- மாண்புமிகு அமைச்சர் செல்லூர் ராஜு காணொளி

தமிழகத்தில் பேருந்துகள் இயக்கத்திற்கான விதிமுறைகள் என்னென்ன...? காணொளி



தமிழகத்தில் பேருந்துகள் இயக்கத்திற்கான விதிமுறைகள் என்னென்ன...? காணொளி

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும்.



சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும்.

தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெிளியிட்டுள்ள அறிக்கையின் படி,  மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை 1.6.2020 முதல்

நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறன.

\மண்டலம் 1  : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்

மண்டலம் 2 : தருமபுரி, வேலுhர், திருப்பத்துhர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி

மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுhர் மற்றும் கள்ளக்குறிச்சிமண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலுhர், பெரம்பலுhர் மற்றும் புதுக்கோட்டை

மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்

மண்டலம் 6:  துhத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

மண்டலம் 7-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் மண்டலம் 8-ல் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.

மண்டலம் 7 மற்றும் மண்டலம் 8க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை  என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை.

அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினத்தந்தி




சென்னை காவல் எல்லை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் என்னென்ன? முழு விவரம்



சென்னை காவல் எல்லை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் என்னென்ன? முழு விவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஜூன் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:

வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. 

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.

மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.

திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (க்ஷயச), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள்,அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.

இறுதி ஊர்வலங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள்:

இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு  அனுமதி 

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க

வேண்டும்.

வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு

பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள  மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள் இ.பாஸ் இன்றி பயன்படுத்தலாம்.

ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.

முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில், கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

தொழில் நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.

அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடுபணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.

பொது மக்கள் இ-பாஸ் அனுமதியில்லாமல், தனியார் போக்குவரத்துக்கு அரசினால் அனுமதிக்கப்பட்டாலும், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள், இந்நோய்த் தொற்றை தடுக்கும் வகையில்

அவர்களது பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் மீது, குறிப்பாக, வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் போன்ற வெளி நபர்கள் உள்ளே பிரவேசிக்க தேவையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

நன்றி: தினத்தந்தி

Saturday 30 May 2020

மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண தொகுப்பு யாருக்கு பலன் அளிக்கப்போகிறது? என்பது குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ‘தந்தி‘ டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்து உள்ளார்.



மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண தொகுப்பு யாருக்கு பலன் அளிக்கப்போகிறது? என்பது குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ‘தந்தி‘ டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்து உள்ளார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண தொகுப்பு யாருக்கு பலன் அளிக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் ஒரு பக்கம் எழுந்து நிற்க, அது வெறும் கண் துடைப்பு நாடகம் என இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். ரூ.20 லட்சம் கோடி நிவாரண தொகுப்பு ரிசர்வ் வங்கி அறிவித்தும் வங்கிகள் மாத தவணைகளை பிடித்தம் செய்வது, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்து விட்டதா? போன்ற பல கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை பார்க்கலாம்.

கேள்வி:- 20 லட்சம் கோடி ரூபாய் என்ற மொத்த தொகை பற்றி பலரும் சந்தேகங்களை எழுப்புகின்றனர். “உண்மையிலேயே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தான் அரசாங்கத்தின் நிகர செலவாக இருக்கும். 20 லட்சம் கோடி ரூபாய் என்கிற கணக்கே தவறு“ என்கின்றனர். இதற்கு உங்களின் பதில் என்ன?

பதில்:- இதை அனைவரும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த ரூ.20 லட்சம் கோடியில் எது எங்கிருந்து வருகிறது என்ற கணக்கை யார் வேண்டுமானாலும் போட முடியும். எதையும் நாங்கள் மூடி மறைக்கவில்லை. அது ஒரு பக்கம் இருந்தாலும், மக்களின் கைகளில் எவ்வளவு பணம் சேருகிறது என்பதே முக்கியம். வங்கிகள் மூலமாக சேருகிறது. அவர்களுக்கு தேவையான முதலீடுகளை திரட்டுவதற்கான உதவித்தொகை, வட்டி மானியம் இவை மூலம் சேருகிறது. இன்று என்னுடைய முக்கிய குறிக்கோள், மக்கள் கைகளுக்கு பணம் செல்கிறதா என்பதே. அவர்கள் நடத்தும் தொழில்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. ஊரடங்கினால் தொழில்களை நடத்த முடியாமல் வீடுகளில் முடங்கியிருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி அன்று பேசும்போது, முதலில் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும், பின்னர் அவர்களின் சொத்துகள், தொழில்களுக்கு பாதுகாப்பு தேவை என்றார். தொழில்களை மீண்டும் தொடங்குவதற்கு என்ன தேவையோ அவற்றை அளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இது அரசிடம் இருந்து சென்றுள்ளதா? அல்லது ரிசர்வ் வங்கியிடம் இருந்து சென்றுள்ளதா? என்று அலசிப்பார்ப்பது உங்களின் உரிமை. இதில் ரகசியம் எதுவுமில்லை. என்னுடைய நோக்கம், தொழில்களை மீண்டும் தொடங்க அவர்களுக்கு தேவையான நிதி கிடைக்க வேண்டும் என்பதே.

கேள்வி:- மக்களுக்கு நேரடி நிதி உதவி அளிக்கும் வகையில், குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை அளித்திருக்க முடியாதா?

பதில்:- அரசு அனைத்து துறைகளின் மந்திரிகளுடன் ஆலோசித்த பின், துறை சார் நிபுணர்கள் அளித்த ஆலோசனைகளையும் பரிசீலனை செய்த பிறகு தான், இந்த முறையில் இதை செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். இந்த முறைக்கு பதிலாக, வேறு முறைகளில் இதை அளித்திருக்கலாம் என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு. அதை தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் நாங்கள் அவை அனைத்தையும் ஆராய்ந்த பின், இந்த நிதி தொகுப்பை உருவாக்கினோம்

கேள்வி:- வங்கி கடன்களுக்கான மாதாந்திர தவணைகளை 6 மாதங்களுக்கு செலுத்த வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் பல இடங்களில் வங்கிகள் மாதாந்திர இ.எம்.ஐ. தொகைகளை பிடித்தம் செய்வதாக புகார்கள் வருகின்றனவே?

பதில்:- வங்கிகள் அப்படி பிடித்தம் செய்தால் அது தவறு. உங்களுக்கு இதை பற்றி வரும் புகார்கள், செய்திகளை எங்களுக்கும் அனுப்ப கேட்டுக் கொள்கிறேன். இதுவரை எனக்கு நேரடியாக எந்த புகாரும் வரவில்லை. அப்படி யாராவது அனுப்பினால், கண்டிப்பாக நான் நடவடிக்கை எடுப்பேன். நிதியமைச்சக வலைதளத்தில், மின்னஞ்சல் முகவரி உள்ளது. அதற்கு புகார்களை அனுப்பலாம்.

கேள்வி:- தொழில்களை மீண்டும் தொடங்குவதற்கு தேவையான நிதி உதவிகள், கடன்கள் அளிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் உற்பத்தியை மீண்டும் தொடங்கினாலும், பொருட்களை வாங்க மக்களிடம் பணம் இருக்கிறதா? யார் கைகளிலும் பணம் இல்லாத சூழலில், நுகர்வை எப்படி அதிகரிப்பது?

பதில்:- தேவை மற்றும் நுகர்வு என்ற இரண்டு பகுதிகளும், தனித்தனியான பகுதிகளாக கருதப்பட்டு, அதன்மூலம் பொருளாதார அடிப்படைகளை புரிந்து கொள்ள முடியும். ஆனால் நடைமுறையில் இவை இரண்டும் அப்படி முற்றிலும் தனித்தனியாக பிரித்து பார்க்கக்கூடியவை அல்ல. ஒரு பெட்டிக்கடை நடத்துபவருக்கு வங்கி மூலம் கிடைக்கும் கடன் உதவியை வைத்து முதலில் தான் அளிக்க வேண்டிய தொகைகளை, தன் ஊழியர்களுக்கான சம்பளத்தை கொடுப்பார். சம்பளம் வாங்குபவர்கள், அதை செலவு செய்வார்கள். அவர்கள் அதை எதற்கு செலவழிக்கிறார்களோ, அத்துறையில் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும். கடையை திறந்த பின், அங்கு உள்ள பண்டங்களில், இருப்பு குறைந்தாலோ, அல்லது முழுவதும் விற்றுப் போனாலோ அவற்றை மீண்டும் வாங்குவார். அது தேவையை உருவாக்கும். பெட்டிக்கடைக்காரர்கள், வணிகர்கள் இவர்கள் இப்படி பொருட்களை வாங்கும்போது அது தேவை என்றுதானே கருதப்படும் ?

கேள்வி:- மாநிலங்கள் கடன் பெறும் அளவு, மாநில உற்பத்தியில் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்-அமைச்சர் உள்ளிட்ட பல முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களே?

பதில்:- அதை எதிர்ப்பது அவர்களின் உரிமை. நிதிக்குழு மூலம் மத்திய அரசில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதி விவகாரங்களில் நிபந்தனைகள் எதுவும் விதிக்கக்கூடாது. விதிக்கவும் இல்லை. மாநிலங்கள் கடன் வாங்கும் அளவின் வரம்பு 3-ல் இருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதில், 0.5 சதவீதம் வரை எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அடுத்த ஒரு சதவீதத்தை நான்காக பிரித்து, ஒவ்வொரு கால் சதவீதத்துக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று மிக அதிக துன்பங்களை அடைந்துள்ளனர். இதை பற்றி மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. “ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை“ திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், இன்று அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கும். அவர்களின் குடும்பம் ஒரு பகுதி ரேஷன் பொருட்களையும், இவர்கள் பணிபுரியும் இடத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இவர்கள் மற்றொரு பகுதியையும் பெற்றிருக்க முடிந்திருக்கும். ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்தும் மாநில அரசுகள், கால் சதவீத அளவுக்கு கடன்களை அதிகம் வாங்கலாம். இதில் என்ன தவறு?

கேள்வி:- பிற மாநில தொழிலாளர்களுக்கு, அம்மாநிலங்களில் என்ன அளிக்கப்படுமோ, அதே அளவிலான ரேஷன் பொருட்களை இங்கு பெற்றுக் கொள்ளலாம் என்கிறீர்களா?

பதில்:- டிஜிட்டல் ஸ்கானிங் முறையில், அவர்களின் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டதை கழித்து, மீதமுள்ள அளவுக்கு இங்கு அவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இது கூடாது என்றால், அது உங்களின் விருப்பம். ஆனால் இதை நிபந்தனையாக விதிக்கக்கூடாது என்று சொல்வது ஆச்சரியமாக உள்ளது.

கேள்வி:- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்காமல், அதற்கு பதிலாக அவர்களின் வங்கிக் கணக்குகளில், மானியத்தொகையை நேரடியாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளதே?

பதில்:- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவே இல்லை. தாராளமாக கொடுக்கலாம். ஆனால் அப்படி அளிப்பதில் ஒரு முறைப்படுத்துதல் அவசியம் என்கிறோம். மின்சார வாரியத்துக்கு வர வேண்டிய தொகைகள் வராமல் நிலுவையில் இருப்பதால், மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு மின்வாரியங்கள் செலுத்த வேண்டிய தொகைகளை அளிக்க முடியவில்லை. இதனால் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்தை விற்பனை செய்ய மறுத்தால், யார் பாதிப்படைவார்கள்? ஏழை மக்கள், விவசாயிகளை பாதிக்கும். இப்போது அப்படி ஒரு நிலை உருவானதால், அவசர அவசரமாக ரூ.90 ஆயிரம் கோடியை மின்வினியோக நிறுவனங்களுக்கு, நிபந்தனைகளே இல்லாமல் அளித்திருக்கிறோம். நீங்கள் இலவச மின்சாரத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால் அதற்கு ஆகும் கட்டணத்தை மின்வாரியத்துக்கு மாநில அரசுகள் ஒழுங்காக அளிக்க வேண்டும். அப்போது தான் மின்வினியோகம் சீராக நடைபெறும். அதை தான் நாங்கள் சொல்கிறோம். ஒன்று மாநில அரசு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் மானியத்தொகையை செலுத்தலாம். அதை வைத்து அவர்கள் மின்கட்டணத்தை செலுத்துவார்கள். அல்லது இதற்கு பதிலாக மொத்தமாக அரசே இந்த தொகையை மின்வினியோக நிறுவனங்களுக்கு அளிக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதை செயல்படுத்தலாம்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். 

நன்றி: தினத்தந்தி.

தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்து உள்ளது.



தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு  -தமிழக அரசு

மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்து உள்ளது.


இன்றுடன் 4-வது கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் படி தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளுடன் நீட்டிப்பை அறிவித்து உள்ளது.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு

பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிப்பு

ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை

மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு

ஜூன் 1 முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயங்கும் 

அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி

சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள், தேநீர் கடைகள், பெரிய கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி

சலூன் கடை, அழகு நிலைய கடைகள் ஏசி வசதியை பயன்படுத்தாமல் செயல்பட அனுமதி 

ஆட்டோக்களில் பயணிகள் 2 பேர் வரை பயணம் செய்ய  அனுமதி

திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார், கூட்ட அரங்குகளை திறக்க தடை

தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்

ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி

வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்

50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி

ஜூன் 30 வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை நீட்டிப்பு

கல்வி நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றலை தொடரலாம்; அதனை ஊக்கப்படுத்தலாம்

நன்றி: தினத்தந்தி

மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 30ஆம் தேதி வரை தடை விதிப்பு

வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்

நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை... திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும்

மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு

நன்றி: தினத்தந்தி

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து நேற்று மத்தியஅரசு அறிவித்தது. மற்ற இடங்களில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் 
தேதி வரை ஊரடங்கை நீட்டித்து நேற்று மத்தியஅரசு அறிவித்தது. மற்ற இடங்களில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைய இருந்தது.

இதற்கிடையே கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? என்ற கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நேற்று முன்தினம் பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில், ஜூன் மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. அதேசமயம் பல கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும். அங்கு எந்த தளர்வும் இன்றி நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

* கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லையை உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட நிர்வாகம் வரையறுக்க வேண்டும்.

* கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் சப்ளை, அவரச மருத்துவ தேவைகள் தவிர அந்த பகுதிகளில் இருந்து யாரும் வெளியே செல்லவோ, அந்த பகுதிக்குள் வரவோ கூடாது.

* கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய்த்தொற்றை கண்டறிய வீடு வீடாக ஆய்வு செய்ய வேண்டும்.

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே மற்ற பகுதிகளில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அங்கு அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், சில கட்டுப்பாடுகள் தொடரும்.

* கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே, நோய்த்தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கண்டறிந்து, அங்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

* முதல் கட்ட தளர்வாக 8-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்களை திறக்க அனுமதிக்கப்படுகிறது. விருந்தோம்பல் சேவைகளை தொடங்கலாம்.

* அடுத்ததாக மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுடன் கலந்து ஆலோசித்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்படும்.

* கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் மாநில அரசுகள் ஆலோசனை நடத்த வேண்டும். அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் ஜூலை மாதம் முடிவு எடுக்கப்படும்.

* சூழ்நிலைகளை பொறுத்து சர்வதேச விமான சேவை, மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க முடிவு செய்யப்படும்.

* சூழ்நிலைகளை பொறுத்து சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான பார்கள், கலையரங்கங்கள் திறக்கப்படும்.

* இதேபோல் சூழ்நிலைகளை பொறுத்தே சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாசார, மத விழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

* அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை யாரும் வெளியே வரக்கூடாது. இதற்கான தடை உத்தரவை உள்ளூர் அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும்.

* மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் மனிதர்கள் சென்று வரவும், சரக்குகளை கொண்டு செல்லவும் தடை இல்லை. இதற்கு தனியாக அனுமதி அல்லது இணையதள பாஸ் (இ பாஸ்) போன்ற எதுவும் தேவை இல்லை. என்றாலும் இதை அரசுகள் ஒழுங்குபடுத்த வேண்டும்.

* அண்டை நாடுகளுக்கான சரக்கு போக்குவரத்தை மாநிலங்கள் தடுக்கக்கூடாது.

* வழிகாட்டு நெறிமுறைகளுடன் பயணிகள் ரெயில்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சராமிக் சிறப்பு ரெயில்கள் உள்நாட்டு விமான போக்குவரத்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவது தொடர்ந்து நடைபெறும்.

* அத்தியாவசிய மற்றும் மருத்துவ தேவைகள் தவிர 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.

* பொது இடங்களிலும், வழிபாட்டு தலங்களிலும், பயணத்தின் போதும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

* பொது இடங்களில் குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

* கடைகளில் ஒரே சமயத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.

* திருமண விழாவில் 50 பேருக்கு மேலும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 20 பேருக்கு மேலும் கூடக்கூடாது.

* உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நன்றி: தினத்தந்தி

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் தளர்வுகள் எப்படி இருக்கும் ?காணொளி.




ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் தளர்வுகள் எப்படி இருக்கும் ?காணொளி.




Friday 29 May 2020

படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளால் விமானப் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படும். காணொளி



படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளால் விமானப் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படும். காணொளி

கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் குழந்தைசாமி சுகாதாரத்துறை (ஓய்வு) காணொளி


கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் குழந்தைசாமி சுகாதாரத்துறை (ஓய்வு) காணொளி





பத்தாம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கலாம் மருத்துவர் ராஜா ஐ.எம்‌எ... காணொளி




பத்தாம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கலாம் மருத்துவர் ராஜா ஐ.எம்‌எ... காணொளி

குழந்தைகளின் நலன் முக்கியமா பொதுத்தேர்வு முக்கியமா? நெடுஞ்செழியன் கல்வியாளர் கருத்து காணொளி.



குழந்தைகளின் நலன் முக்கியமா பொதுத்தேர்வு முக்கியமா? நெடுஞ்செழியன் கல்வியாளர் கருத்து காணொளி.

பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன். காணொளி



பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன். காணொளி

கொரோனா உயிரிழப்பு சீனாவை மிஞ்சிய இந்தியா...! காணொளி



கொரோனா உயிரிழப்பு சீனாவை மிஞ்சிய இந்தியா...! காணொளி

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம். காணொளி



தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம். காணொளி

வெட்டுக்கிளிகளை அழிக்க விமானப்படை ஹெலிகாப்டர் காணொளி



வெட்டுக்கிளிகளை அழிக்க விமானப்படை ஹெலிகாப்டர் காணொளி

பல்கலைக்கழகம், என்ற வார்த்தையை நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என்று யு ஜி சி எச்சரிக்கை! காணொளி



பல்கலைக்கழகம், என்ற வார்த்தையை
நிகர்நிலை கல்வி நிறுவனங்கள்  பயன்படுத்தக்கூடாது என்று யு ஜி சி எச்சரிக்கை! காணொளி

மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரை. காணொளி



மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரை. காணொளி

Thursday 28 May 2020

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில் பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது. காணொளி



புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில் பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது. காணொளி

தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை- விவசாயிகள் மகிழ்ச்சி காணொளி



தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை- விவசாயிகள் மகிழ்ச்சி காணொளி

இந்தியா-சீனா பிரச்சினையில் புதிய திருப்பம் தூதர் மூலம் அறிக்கை வெளியிட்ட சீன அரசு காணொளி



இந்தியா-சீனா பிரச்சினையில் புதிய திருப்பம் தூதர் மூலம் அறிக்கை வெளியிட்ட சீன அரசு காணொளி

அரசு தரவு மையம் கருவூல மற்றும் கணக்குத் துறையின் அனைத்து பிராந்திய இயக்குநர்களும். அனைத்து ஊதிய மற்றும் கணக்கு அதிகாரிகள். அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களும். திரு சி.சமயமூர்த்தி, ஐ.ஏ.எஸ் .. ஆணையாளர் (FAC). அரசு தரவு மையம், சென்னை - 600 025. ஐயா / மேடம், எல்.ஆர். எண் 1802/1/2019, தேதியிட்டது: 27.05.2020 துணை: அரசு தரவு மையம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் சந்தாதாரர்களுக்கு சிபிஎஸ் குறியீட்டு எண்களை ஒதுக்குதல் ஆன்லைன் போர்ட்டல் பெயர் மற்றும் பிறந்த தேதிக்காக ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளது சிபிஎஸ் குறியீட்டு எண்களில் திருத்தம் - குறித்து. சந்தாதாரர்களுக்கு சிபிஎஸ் குறியீட்டு எண்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் (எஸ் 1 படிவம்) டி.டி.ஓ.எஸ் மூலம் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் குறியீட்டு எண்கள் ஆன்லைனில் உருவாக்கப்படுகின்றன. மேற்கண்ட செயல்முறைக்குப் பிறகு, சந்தாதாரர்களின் பெயர், பிறந்த தேதி போன்றவை ஏதேனும் தவறாகக் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட டி.டி.ஓக்கள் பிழைகளைத் திருத்துவதற்கு சம்பந்தப்பட்ட பதிவுகளின் கடின நகலுடன் இந்தத் துறையை உரையாற்றுவார்கள். அத்தகைய கடிதங்களைப் பெற்ற பிறகு, சிபிஎஸ் சந்தாதாரர்களின் பெயர், பிறந்த தேதி போன்றவற்றில் கோரப்பட்ட திருத்தம் இந்த துறையால் கைமுறையாக சரிசெய்யப்படுகிறது. இந்த நிகழ்வில், இந்தத் திணைக்களத்தின் கோரிக்கையின் படி, சம்பந்தப்பட்ட டி.டி.ஓக்களால் சிபிஎஸ் குறியீட்டு எண்களில் ஏதேனும் இருந்தால், தவறான பெயர், பிறந்த தேதி போன்றவற்றை புதுப்பிக்க / சரிசெய்ய என்ஐசி ஒரு ஆன்லைன் தொகுதியை வடிவமைத்துள்ளது. இந்த தொகுதி 27.05.2020 அன்று தொடங்கப்பட்டது மற்றும் டி.டி.ஓ.எஸ் அணுகலுக்கு தயாராக உள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட போர்டல் முகவரி "www.cps.tn.gov.in". இனிமேல், டி.டி.ஓக்கள் கொடுக்கப்பட்ட போர்ட்டலில் உள்நுழைந்து, முகப்பு பக்கத்தில் காணப்படும் "குறியீட்டு புதுப்பிப்பு" தாவலை அணுகுவதன் மூலம் தவறான பெயர், பிறந்த தேதி போன்றவற்றை புதுப்பிக்க / திருத்தலாம். சிபிஎஸ் குறியீட்டு எண்களில் ஏதேனும் இருந்தால், . எனவே, சிபிஎஸ் குறியீட்டு எண்களில் ஏதேனும் காணப்பட்டால், தவறான பெயர், பிறந்த தேதி போன்றவற்றை புதுப்பிக்க / சரிசெய்ய சம்பந்தப்பட்ட உங்கள் டி.டி.ஓக்களுக்கு மேலே உள்ள உண்மையை நீங்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், மேலும் அனைத்து டி.டி.ஓ. சிபிஎஸ் குறியீட்டு எண்களில் ஏதேனும் தவறாகக் காணப்பட்டால், சந்தாதாரர்களின் பெயர், பிறந்த தேதி போன்றவற்றைப் புதுப்பித்தல் / திருத்துதல் தொடர்பாக எதிர்காலத்தில் இந்தத் துறைக்கு (ஜி.டி.சி) அனுப்பப்பட மாட்டாது என்பதை உறுதிசெய்ய. கமிஷனருக்கு (FAC).




GOVERNMENT DATA CENTRE

To:

All the Regional Directors of Treasuries and Accounts Department.

All the Pay and Accounts Officers.

All the District Treasury Officers.

From:

Thiru C. Samayamoorthy, I.A.S..

Commissioner (FAC).

Government Data Centre, Chennai - 600 025.

Sir / Madam,

Lr. No. 1802/1/2019, Dated: 27.05.2020

Sub: Government Data Centre - Contributory Pension Scheme Assigning CPS index numbers to the subscribers Online Portal hosted for name and date of birth Correction in the CPS index numbers - Regarding.

The applications (S1 Form) to obtain CPS Index Numbers to the subscribers are being applied by the DDOS and the Index Numbers are generated through online.

After the above process, the subscribers name, date of birth, etc. if any found incorrect, the concerned DDOs will address this Department with the hard copy of relevant records to rectify the errors. After receiving such correspondence, the requested correction in the CPS subscribers name, date of birth, etc. are being manually rectified by this Department.

In this instance, as requested by this Department, the NIC has designed a Online Module to update/rectify the incorrect name, date of birth, etc. if any found in the CPS index numbers by the concerned DDOs itself. The said module has been launched on 27.05.2020 and ready for access by the DDOS. The above mentioned portal address is "www.cps.tn.gov.in". Hereafter, the DDOs may log in to the given portal and by accessing the "Index Updation" tab found in the home page to update/rectify the incorrect name, date of birth, etc. if any found in the CPS index numbers by them itsell.

Hence, I request you all to intimate the above fact to your DDOs concerned to update/rectify the incorrect name, date of birth, etc. if any found in the CPS index numbers by them itself and you are also requested to intimate all the DDOs to ensure that no more correspondence(HARD COPY) will be sent to the this Department (GDC) in future in respect of updating/rectifying the subscribers name, date of birth, etc. if any found incorrect in the CPS index numbers.

for Commissioner (FAC).

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 34 பேருக்கு கொரோனா பாதிப்பு காணொளி.



செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 34 பேருக்கு கொரோனா பாதிப்பு காணொளி.

இந்தியா சீனா எல்லையில் என்ன நடக்கிறது? காணொளி



இந்தியா சீனா எல்லையில் என்ன நடக்கிறது? காணொளி

மீண்டும் நடத்தப்படவிருந்த புல்வாமா தாக்குதல் முறியடிப்பு! காணொளி



மீண்டும் நடத்தப்படவிருந்த புல்வாமா தாக்குதல் முறியடிப்பு! காணொளி

வேலூர்,குடியாத்தம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள். காணொளி



வேலூர்,குடியாத்தம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள். காணொளி

மருத்துவர்கள் காவலர்கள் தூய்மை பணியாளர்களை போற்றும் பாடல்-சென்னை காவல்துறை வெளியீடு. காணொளி



மருத்துவர்கள் காவலர்கள் தூய்மை பணியாளர்களை போற்றும் பாடல்-சென்னை காவல்துறை வெளியீடு. காணொளி

கல்லூரி கட்டணம் கட்ட நிர்ப்பந்திக்க கூடாது - யு ஜி சி காணொளி



கல்லூரி கட்டணம் கட்ட நிர்ப்பந்திக்க கூடாது - யு ஜி சி காணொளி

வெட்டுக்கிளிகளை விரட்ட பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் (பறக்கும் கேமரா) காணொளி



வெட்டுக்கிளிகளை விரட்ட பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் (பறக்கும் கேமரா) காணொளி

புதிய வரைபடத்தில் இந்தியாவின் நிலங்களை சொந்தம் கொண்டாடிய நேபாளம் காணொளி



புதிய வரைபடத்தில் இந்தியாவின் நிலங்களை சொந்தம் கொண்டாடிய நேபாளம் காணொளி

வட இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் வேட்டை காணொளி



வட இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் வேட்டை காணொளி

முக கவசத்தில் புதிய முயற்சி சென்னை புகைப்பட கலைஞரின் அசத்தல் ஐடியா காணொளி





முக கவசத்தில் புதிய முயற்சி சென்னை புகைப்பட கலைஞரின் அசத்தல் ஐடியா காணொளி

எஜமானர் இறந்ததை அறியாமல் மருத்துவமனையில் மூன்று மாதங்கள் காத்திருந்த நன்றியுள்ள நாய் காணொளி



எஜமானர் இறந்ததை அறியாமல் மருத்துவமனையில் மூன்று மாதங்கள் காத்திருந்த நன்றியுள்ள நாய் காணொளி

வாகன காப்பீடு... வாரி வழங்கும் சலுகை காணொளி



வாகன காப்பீடு... வாரி வழங்கும் சலுகை காணொளி

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் ஒத்திவைப்பு காணொளி



20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் ஒத்திவைப்பு காணொளி

Wednesday 27 May 2020

வணக்கம், இருபால் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு, STiR நிறுவனத்துடன் இணைந்து நாம் செயல்படுத்திவரும் உள்ளார்ந்த ஊக்க பயிற்சி திட்டத்தின் அனைத்து நெட்வொர்க் கூட்டங்களிலும் முனைப்புடன் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களும் நன்றிகள். இந்த பயிற்சித்திட்டம் தொடங்கப்பட்டு மாவட்டம் முழுவதும் இரண்டு LIC-யை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம், இத்தருணத்தில் ஆசிரியர்களிடையான கற்றல்கள் மற்றும் கற்பித்தல் அனுபவங்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு இந்த ஆய்வு அறிக்கையை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர் பெருமக்களும் தவறாமல் இப்படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். நன்றிகள்





வணக்கம்,

இருபால் ஆசிரியர்களின்  கனிவான கவனத்திற்கு,  STiR நிறுவனத்துடன்  இணைந்து நாம் செயல்படுத்திவரும் உள்ளார்ந்த ஊக்க பயிற்சி திட்டத்தின் அனைத்து நெட்வொர்க் கூட்டங்களிலும்  முனைப்புடன் பங்கேற்ற  அனைத்து ஆசிரியர்களும் நன்றிகள். இந்த பயிற்சித்திட்டம் தொடங்கப்பட்டு மாவட்டம் முழுவதும் இரண்டு LIC-யை வெற்றிகரமாக  செயல்படுத்தியுள்ளோம், இத்தருணத்தில் ஆசிரியர்களிடையான கற்றல்கள் மற்றும் கற்பித்தல் அனுபவங்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு இந்த ஆய்வு அறிக்கையை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர் பெருமக்களும் தவறாமல் இப்படிவத்தை  பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
நன்றிகள்

CLICK HERE TO DOWNLOAD GOOGLE DOCUMENT FORM

கொரோனா தாக்கத்தால் அடியோடு பாதித்த அழைப்பிதழ் விற்பனை அழைப்பிதழில் புதுமையை புகுத்திய நபர்:கோவை அது என்ன? காணொளி



கொரோனா தாக்கத்தால் அடியோடு பாதித்த அழைப்பிதழ் விற்பனை அழைப்பிதழில் புதுமையை புகுத்திய நபர்:கோவை அது என்ன? காணொளி

பொருளாதார மந்தநிலை காரணமாக செல்போன் ஏற்றுமதியில் சரிவு காணொளி



பொருளாதார மந்தநிலை காரணமாக செல்போன் ஏற்றுமதியில் சரிவு காணொளி

தமிழ்நாட்டுக்கு வெட்டுக்கிளி தாக்குதல் வர வாய்ப்பில்லை. காணொளி



தமிழ்நாட்டுக்கு வெட்டுக்கிளி தாக்குதல் வர வாய்ப்பில்லை. காணொளி

சீனாவின் மிரட்டல் இந்தியாவிடம் பலிக்காது காணொளி



சீனாவின் மிரட்டல் இந்தியாவிடம் பலிக்காது காணொளித

வெட்டுக்கிளிகளால் இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை ஆரம்பம் காணொளி



வெட்டுக்கிளிகளால் இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை ஆரம்பம் காணொளி

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் காணொளி



ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் காணொளி

01-06-2020 முதல் அனைத்துவகை சம்பளம் பட்டுவாட e pay roll இல் வழங்கப்படமாட்டாது IFHRMS மூலமே வழங்கப்படும்- திருநெல்வேலி மாவட்டம் CLICK HERE TO DOWNLOAD PDF



01-06-2020 முதல் அனைத்துவகை சம்பளம் பட்டுவாட e pay roll இல் வழங்கப்படமாட்டாது IFHRMS மூலமே வழங்கப்படும்- திருநெல்வேலி மாவட்டம்

CLICK HERE TO DOWNLOAD PDF

Tuesday 26 May 2020

தாக்குதல் வேகத்தை குறைக்காத கொரோனா! காணொளி



தாக்குதல் வேகத்தை குறைக்காத கொரோனா! காணொளி

அனைத்து கோவில்களையும் ஜூன் 1 முதல் திறக்க அனுமதி காணொளி



அனைத்து கோவில்களையும் ஜூன் 1 முதல் திறக்க அனுமதி காணொளி

கொரோனா 2 ஆம் அலை எப்போது வேண்டுமானாலும் வீசலாம்! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை காணொளி



கொரோனா 2 ஆம் அலை எப்போது வேண்டுமானாலும் வீசலாம்! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை காணொளி

10,12-வது மாணவர்களுக்கு தொடங்குகிறது ஆன்லைன் வகுப்புகள் ஸ்மார்ட்போன் வழங்கி சென்னை மாநகராட்சி உதவி! காணொளி



10,12-வது மாணவர்களுக்கு தொடங்குகிறது ஆன்லைன் வகுப்புகள் ஸ்மார்ட்போன் வழங்கி சென்னை மாநகராட்சி உதவி! காணொளி

ஆரோக்கிய சேது செயலி 40 நாட்களில் 10 கோடி பயனாளர்கள் பெற்றது காணொளி



ஆரோக்கிய சேது செயலி 40 நாட்களில் 10 கோடி பயனாளர்கள் பெற்றது காணொளி

போருக்கு தயாராக இருக்கும்படி சீன ராணுவத்துக்கு உத்தரவு அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பால் பதற்றம் காணொளி


போருக்கு தயாராக இருக்கும்படி சீன ராணுவத்துக்கு உத்தரவு அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பால் பதற்றம் காணொளி

இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை மத்திய அரசு காணொளி



இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை மத்திய அரசு காணொளி

ஜூன் மாத ரேஷன் பொருட்கள் இலவசம் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. காணொளி



ஜூன் மாத ரேஷன் பொருட்கள் இலவசம் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. காணொளி


Monday 25 May 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் மனநிலை என்ன தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு. காணொளி



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் மனநிலை என்ன தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு. காணொளி

கொரோனா வைரஸ்- அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் என்ன? காணொளி



கொரோனா வைரஸ்- அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் என்ன? காணொளி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை. காணொளி



பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை. காணொளி

ஊரடங்கால் தூய்மையான யமுனை நதி காணொளி



ஊரடங்கால் தூய்மையான யமுனை நதி காணொளி

இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்த சீனா திட்டம்? காணொளி



இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்த சீனா திட்டம்? காணொளி

அமெரிக்கா தைவானுக்கு உதவுவதால் சீனா கடும் அதிருப்தி!! போர் மூளும் அபாயம்! காணொளி



அமெரிக்கா தைவானுக்கு உதவுவதால் சீனா கடும் அதிருப்தி!! போர் மூளும் அபாயம்! காணொளி

தமிழகத்தின் கடைசி ராஜா இவர்தானா! தீர்த்தபதி காணொளி



தமிழகத்தின் கடைசி ராஜா இவர்தானா! தீர்த்தபதி காணொளி.


ஏழுமலையானின் சொத்துக்கள் ஏலம் விடுவது தற்காலிக நிறுத்தம்!! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு. காணொளி



ஏழுமலையானின் சொத்துக்கள் ஏலம் விடுவது தற்காலிக நிறுத்தம்!! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு. காணொளி

"கல்வித்துறையின் 10 வகுப்பு தேர்வில் பரிசீலனையில் உள்ள மூன்று விதமான திட்டங்கள் இருப்பதாக தகவல்"காணொளி



"கல்வித்துறையின் 10 வகுப்பு தேர்வில் பரிசீலனையில் உள்ள மூன்று விதமான திட்டங்கள் இருப்பதாக தகவல்"காணொளி

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! காணொளி



தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! காணொளி

துணை முதல்வரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்... காணொளி



துணை முதல்வரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்... காணொளி

சமூக வலைதளங்களில் வைரலாகும் செய்தித்தாள் ஆடைகள்! காணொளி



சமூக வலைதளங்களில் வைரலாகும் செய்தித்தாள் ஆடைகள்! காணொளி

கொரோனாவிற்கு மன தைரியம் தான் சிறந்த மருந்து"- காவல் துணை ஆணையர்... காணொளி



கொரோனாவிற்கு மன தைரியம் தான் சிறந்த மருந்து"- காவல் துணை ஆணையர்... காணொளி

Sunday 24 May 2020

EMIS-U DISE PLUS: DECLARATION எளிதாக mobile phone ல் SUBMIT செய்வது எப்படி?



EMIS-U DISE PLUS: DECLARATION எளிதாக mobile phone ல் SUBMIT செய்வது எப்படி?

போர் ஒத்திகையில் அமெரிக்கா சீனா பீதி காணொளி



போர் ஒத்திகையில் அமெரிக்கா சீனா பீதி காணொளி

சிறு பூச்சியால் நெருங்கி வருமா இந்தியாவும் பாகிஸ்தானும்? காணொளி



சிறு பூச்சியால் நெருங்கி வருமா இந்தியாவும் பாகிஸ்தானும்? காணொளி

"ரயிலில் பயணிக்க ஆரோக்கிய சேது கட்டாயம்" - ரயில்வே அமைச்சகம். காணொளி



"ரயிலில் பயணிக்க ஆரோக்கிய சேது கட்டாயம்" - ரயில்வே அமைச்சகம். காணொளி

சென்னையில் அடங்க மறுக்கும் கொரோனா - ஒரே நாளில் 625 பேருக்கு தொற்று உறுதி காணொளி



சென்னையில் அடங்க மறுக்கும் கொரோனா - ஒரே நாளில் 625 பேருக்கு தொற்று உறுதி காணொளி

நாடு முழுவதும் வீசிய அனல் காற்று உச்சம் தொட்ட வெப்பநிலை காணொளி



நாடு முழுவதும் வீசிய அனல் காற்று உச்சம் தொட்ட வெப்பநிலை காணொளி

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி திருப்பத்தூரில் பிடிபட்டார் காணொளி



ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி திருப்பத்தூரில் பிடிபட்டார் காணொளி

கொரோனாவுடன் இன்னும் 2 மாத காலம் போராட வேண்டியிருக்கும் காணொளி


கொரோனாவுடன் இன்னும் 2 மாத காலம் போராட வேண்டியிருக்கும் காணொளி

அரசு கல்லூரிகளில் பல புதிய பாடப்பிரிவுகள் துவக்கம் காணொளி



அரசு கல்லூரிகளில் பல புதிய பாடப்பிரிவுகள் துவக்கம் காணொளி

லடாக் எல்லையில் பதற்றம் படைகளை குவிக்கிறது சீனா காணொளி



லடாக் எல்லையில் பதற்றம் படைகளை குவிக்கிறது சீனா காணொளி

உயிரோடு உடலைப் பூமிக்குள் புதைத்து பூஜை கொரோனா நீங்க வேண்டுதலாம்! காணொளி



உயிரோடு உடலைப் பூமிக்குள் புதைத்து பூஜை கொரோனா நீங்க வேண்டுதலாம்! காணொளி

கொரோனா காலத்திலும் பசி போக்கும் வள்ளலாரின் அணையா அடுப்பு காணொளி



கொரோனா காலத்திலும் பசி போக்கும் வள்ளலாரின் அணையா அடுப்பு காணொளி

தந்தையை சைக்கிளில் வைத்து 1,200 கிலோ மீட்டர் அழைத்துச் சென்ற சிறுமி காணொளி



தந்தையை சைக்கிளில் வைத்து 1,200 கிலோ மீட்டர் அழைத்துச் சென்ற சிறுமி காணொளி

Friday 22 May 2020

கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் ஹோமியோபதி மருந்து. காணொளி



கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் ஹோமியோபதி மருந்து. காணொளி

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு காணொளி



உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு காணொளி

பாத்திரத்தை வைத்தால் போதும் தாமாகவே பால் கறக்கும் அதிசய பசு காணொளி



பாத்திரத்தை வைத்தால் போதும் தாமாகவே பால் கறக்கும் அதிசய பசு காணொளி

தமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு காணொளி



தமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு காணொளி

சானிடைசர்களால் கைகளுக்கு ஆபத்து நுரையீரல் நிபுணர் டாக்டர் அனந்த் சுப்பிரமணியன் கருத்து: காணொளி



சானிடைசர்களால் கைகளுக்கு ஆபத்து நுரையீரல் நிபுணர் டாக்டர் அனந்த் சுப்பிரமணியன் கருத்து: காணொளி

கொரோனா 2 ஆவது அலையாக தாக்க வாய்ப்பு காணொளி



கொரோனா 2 ஆவது அலையாக தாக்க வாய்ப்பு காணொளி

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் பயில யுஜிசி ஒப்புதல் காணொளி



ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் பயில யுஜிசி ஒப்புதல் காணொளி

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது லேண்டிங் கியர் பழுது காரணம் காணொளி





பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது லேண்டிங் கியர் பழுது காரணம் காணொளி


BBC news Tamil

Thursday 21 May 2020

ஆட்டு மந்தைகளை மேய்க்கும் நாலு கால் ரோபோ காணொளி



ஆட்டு மந்தைகளை மேய்க்கும் நாலு கால் ரோபோ காணொளி

தொற்றுக்கு ஆளானதை கண்டுபிடிக்கும் செல்போன் தொழில்நுட்பம் காணொளி



தொற்றுக்கு ஆளானதை கண்டுபிடிக்கும் செல்போன் தொழில்நுட்பம் காணொளி

மிரட்டும் கொரோனா மிரளும் தமிழகம்! காணொளி



மிரட்டும் கொரோனா மிரளும் தமிழகம்! காணொளி

பத்தாம் வகுப்பு தேர்வு புதிய வழிகாட்டுதல்கள் காணொளி






பத்தாம் வகுப்பு தேர்வு புதிய வழிகாட்டுதல்கள் காணொளி

"மருந்து மாபியாக்கள் கதை" கதை நேரம் காணொளி



"மருந்து மாபியாக்கள் கதை" கதை நேரம் காணொளி

வட மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் தாண்டும் எச்சரிக்கை காணொளி



வட மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் தாண்டும் எச்சரிக்கை காணொளி

ரயிலில் இனி பயணம் செய்ய இதெல்லாம் தேவை காணொளி



ரயிலில் இனி பயணம் செய்ய இதெல்லாம் தேவை காணொளி

செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு காணொளி.



செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு காணொளி.





வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஒன்றியம். 21.05.2020 வியாழன் இன்று முற்பகல் 11:00 மணியளவில் துத்தித்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்க்ப்பள்ளியில் கொரோனா நிவாரணப்பொருள்கள் கீ.வ. குப்பம் வட்டாட்சியர் திரு சரவணமுத்து அவர்கள், மண்டலத்துணை வட்டாட்சியர் திரு சந்தோஷ் அவர்கள், வடுகந்தாங்கள் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் முன்னிலையில் 21 பேருக்கு வழங்கப்பட்டது. அது சமயம் BRTE R. V. கோவிந்தசாமி சிறப்பு ஆசிரியர் v.முரளி, சமூக ஆர்வலர் திரு தக்காளி முருகேசன் உடனிருந்தனர். நிவாரண பொருட்கள் தலைமை ஆசிரியர் திரு கி. அசோகன், உதவி ஆசிரியை மு. சுசீலா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியை சேவையை பாராட்டி வாழ்த்தும் உங்கள்... *ஆசிரியர் TECH* *YouTube* *ASIRIYAR TECH NEWS*





வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஒன்றியம்.

21.05.2020 வியாழன்  இன்று முற்பகல் 11:00 மணியளவில் துத்தித்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்க்ப்பள்ளியில் கொரோனா நிவாரணப்பொருள்கள் கீ.வ. குப்பம் வட்டாட்சியர் திரு சரவணமுத்து அவர்கள், மண்டலத்துணை வட்டாட்சியர் திரு சந்தோஷ் அவர்கள், வடுகந்தாங்கள்  வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் முன்னிலையில்  21 பேருக்கு வழங்கப்பட்டது. அது சமயம்  BRTE  R. V. கோவிந்தசாமி சிறப்பு ஆசிரியர்  v.முரளி,  சமூக ஆர்வலர் திரு தக்காளி முருகேசன் உடனிருந்தனர். நிவாரண பொருட்கள் தலைமை ஆசிரியர் திரு கி. அசோகன், உதவி ஆசிரியை மு. சுசீலா அவர்களால்  ஏற்பாடு செய்யப்பட்டது.

தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியை சேவையை பாராட்டி வாழ்த்தும் உங்கள்...

   *ஆசிரியர் TECH*
           *YouTube*

*ASIRIYAR TECH NEWS*


Wednesday 20 May 2020

குணமான கொரோனா நோயாளிகளுக்கு மறு சோதனையில் பாசிட்டிவ் ஏன்?... காணொளி



குணமான கொரோனா நோயாளிகளுக்கு மறு சோதனையில் பாசிட்டிவ் ஏன்?... காணொளி

ஊரடங்கை மக்கள் எந்த அளவிற்கு கடைபிடிக்கிறார்கள்? கூகுள் சொல்லும் செய்தி காணொளி



ஊரடங்கை மக்கள் எந்த அளவிற்கு கடைபிடிக்கிறார்கள்? கூகுள் சொல்லும் செய்தி காணொளி

நேபாளம் வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் சர்ச்சை எதிர்ப்பு தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் காணொளி



நேபாளம் வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் சர்ச்சை எதிர்ப்பு தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை  அமைச்சகம் காணொளி

அரசு அலுவலகம் வருவதில் இருந்து கர்ப்பிணி பெண்களுக்கு விளக்கு. காணொளி



அரசு அலுவலகம் வருவதில் இருந்து கர்ப்பிணி பெண்களுக்கு விளக்கு. காணொளி

இனிமே நம்ம LIFE இப்படித்தான் இருக்கும் ? காணொளி



இனிமே நம்ம LIFE இப்படித்தான் இருக்கும்? காணொளி

NEET, JEE தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் செயலி.. காணொளி



NEET, JEE தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் செயலி.. காணொளி

ஜூன் 1 முதல் இயங்கும் 200 ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது காணொளி



ஜூன் 1 முதல் இயங்கும் 200 ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது காணொளி

பெங்களூரில் ஏற்பட்ட சத்தத்திற்கு சூப்பர்சோனிக் விமானம் காரணம் பாதுகாப்பு துறை விளக்கம் காணொளி



பெங்களூரில் ஏற்பட்ட சத்தத்திற்கு சூப்பர்சோனிக் விமானம் காரணம் பாதுகாப்பு துறை விளக்கம் காணொளி

சூறையாடிய அம்பன்... ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டம் காணொளி



சூறையாடிய அம்பன்... ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டம் காணொளி

Tuesday 19 May 2020

ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்கப்படும்.- பிடிஐ தகவல் காணொளி



ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்கப்படும்.- பிடிஐ தகவல் காணொளி

அசால்ட்டா பேருந்தை தூக்கி தள்ளிய அம்பன் புயலின் கோர தாண்டவம். காணொளி



அசால்ட்டா பேருந்தை தூக்கி தள்ளிய அம்பன் புயலின் கோர தாண்டவம். காணொளி

சென்னை அண்ணா சாலையில் உள்ள HDFC வங்கி ஐடி செக்டர் கிளை வங்கி ஊழியருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது அதனால்.... காணொளி



.சென்னை அண்ணா சாலையில் உள்ள HDFC வங்கி ஐடி செக்டர் கிளை வங்கி ஊழியருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது அதனால்.... காணொளி

அம்பன் தீவிர புயலாக வலுவிழந்து கரையைக்கடக்கும். சென்னை வானிலை மையம் தகவல் காணொளி



அம்பன் தீவிர புயலாக வலுவிழந்து கரையைக்கடக்கும். சென்னை வானிலை மையம் தகவல் காணொளி

எலக்ட்ரானிக் முறையில் புது முகக்கவசம் முன்னாள் ராணுவ அதிகாரி அசத்தல் கண்டுபிடிப்பு காணொளி



எலக்ட்ரானிக் முறையில் புது  முகக்கவசம் முன்னாள் ராணுவ அதிகாரி அசத்தல் கண்டுபிடிப்பு காணொளி

"அலுவலகத்தில் ஒன்றிரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால்" வழிகாட்டுதலை வெளியிட்டது சுகாதார அமைச்சகம் காணொளி



"அலுவலகத்தில் ஒன்றிரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால்"
வழிகாட்டுதலை வெளியிட்டது சுகாதார அமைச்சகம் காணொளி

*பிச்சைக்காரரின் மனிதாபிமானம்: கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார்...*




*பிச்சைக்காரரின் மனிதாபிமானம்: கொரோனா நிவாரண நிதியாக  ரூ.10 ஆயிரம் வழங்கினார்...*

*கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் பிச்சைக்காரர் பூல்பாண்டியன். பொது மக்களை நெகிழ வைத்தது இவரின் மனிதாபிமானம்.*

*தூத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த பூல்பாண்டியன் என்ற பிச்சைக்காரர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 10 ஆயிரத்தை நேரில் சென்று வழங்கினார்.*

*இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மதுரை வந்து இருந்தேன். நடைபாதைகளில் சாலை ஓரங்களில் தங்கியிருந்த என்னை தன்னார்வலர்கள் மீட்டனர். மதுரை மாநகராட்சி சார்பாக தங்க வைத்து இருந்தார்கள் .இந் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்காக என்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி சந்தை, பழ சந்தை மற்றும் பூ மார்க்கெட்டுகளில் பிச்சை எடுத்து கடந்த 15 நாட்களில் ரூபாய் 10 ஆயிரத்தை சேகரித்தேன்.அந்தத் தொகையை இன்று 18-05-2020  மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி இருக்கிறேன்.*

*மேலும் 10 மாவட்டங்களில் இது போன்று பிச்சை எடுத்து தலா ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.10 ஆயிரத்தை வழங்க திட்டமிட்டுள்ளேன். இது  முதல் கட்டமாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று வழங்கியிருக்கிறேன்' என்றார்.*

*மேலும் அவர் கூறுகையில், கடந்த நாற்பதாண்டுகளாக நான் பிச்சை எடுக்கும் பணத்தில் பெரும் பகுதியை ஏறக்குறைய 400 பள்ளிகளுக்கு மேல் நாற்காலி மேசைகள் குடிநீர் சுத்திகரிப்பான் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி உள்ளேன். தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்து என்னால் இயன்ற உதவியை வழங்கி வருகிறேன் என்றார்.*

*போர்முனை செய்திகளுக்காக மதுரை குணா*

*செய்தி பகிர்வு:-*

*பொன்.வள்ளுவன்,*
*செயலாளர்,*
*இந்திய செஞ்சிலுவைச் சங்கம்,*
*பேர்ணாம்பட்டு.*

கொரோனா வைரஸ் தானாக அழிய வாய்ப்பு உள்ளது. காணொளி



கொரோனா வைரஸ் தானாக அழிய வாய்ப்பு உள்ளது. காணொளி

அமெரிக்காவில் விமானங்கள் துரு பிடிப்பதைத் தவிர்க்க பாலை நிலத்தில் நிறுத்திவைப்பு. காணொளி



அமெரிக்காவில்
விமானங்கள் துரு பிடிப்பதைத் தவிர்க்க பாலை நிலத்தில் நிறுத்திவைப்பு. காணொளி

அதி தீவிர "அம்பன் புயல்"எண்ணூரில் இரண்டாவது நாளாக கடல் சீற்றம். காணொளி



அதி தீவிர "அம்பன் புயல்"எண்ணூரில் இரண்டாவது நாளாக கடல் சீற்றம். காணொளி

Monday 18 May 2020

"10 ஆம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு புதிய தேர்வு அட்டவணை வெளியீடு"- மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. காணொளி



"10 ஆம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு புதிய தேர்வு அட்டவணை வெளியீடு"- மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. காணொளி


சர்ச்சையில் சிக்கிய உலக சுகாதார நிறுவனத்தின் கதை- கதை நேரம். காணொளி



சர்ச்சையில் சிக்கிய உலக சுகாதார நிறுவனத்தின் கதை- கதை நேரம். காணொளி

வேறு மாவட்டத்தில் இருந்து பணி செய்ய வரும் ஆசிரியர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யாமல் எவ்வாறு நேரடியாக பணிக்கு திரும்ப அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது தேர்வை ஒத்திவைக்க அல்லது ரத்து செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. காணொளி



வேறு மாவட்டத்தில் இருந்து பணி செய்ய வரும் ஆசிரியர்களை 14 நாட்கள்  தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யாமல் எவ்வாறு நேரடியாக பணிக்கு திரும்ப அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது தேர்வை ஒத்திவைக்க அல்லது ரத்து செய்ய
 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. காணொளி

பத்தாம் வகுப்பு தேர்வுகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் முடிவில்- நாளை இறுதி கட்ட முடிவு வெளியிடப்படும் காணொளி



பத்தாம் வகுப்பு தேர்வுகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் முடிவில்- நாளை இறுதி கட்ட முடிவு வெளியிடப்படும்   காணொளி

உயர் உச்ச புயலாக மாறி நெருங்கிவரும் அம்பன் புயல்- மேதகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை! காணொளி


உயர் உச்ச புயலாக மாறி நெருங்கிவரும் அம்பன் புயல்- மேதகு பாரத பிரதமர்  நரேந்திர மோடி அவசர ஆலோசனை! காணொளி

வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஒன்றியம். இன்று 18-05-2020 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எம்.வி.சமுத்திரம். தலைமையாசிரியை மற்றும் ஆசிரியை சேவையைப் பாராட்டி மனமார வாழ்த்தும் உங்கள்... *ஆசிரியர் TECH* *YouTube* *ASIRIYAR TECH NEWS*





வேலூர் மாவட்டம்
கீ.வ. குப்பம் ஒன்றியம்.

இன்று 18-05-2020 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
எம்.வி.சமுத்திரம்.
தலைமையாசிரியை மற்றும் ஆசிரியை சேவையைப் பாராட்டி மனமார வாழ்த்தும் உங்கள்...

     *ஆசிரியர் TECH*
           *YouTube*

*ASIRIYAR TECH NEWS*

Sunday 17 May 2020

தமிழகத்தில் தர்மபுரி கிருஷ்ணகிரி சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு!காணொளி



தமிழகத்தில் தர்மபுரி கிருஷ்ணகிரி சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு!காணொளி

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு:அவை என்னென்ன? மீதி உள்ள 12 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எந்த தளர்வுமில்லை- காணொளி






தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு:அவை என்னென்ன? மீதி உள்ள 12 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எந்த தளர்வுமில்லை- காணொளி



தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு காணொளி தொகுப்பு






தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு காணொளி தொகுப்பு

CLICK HERE TO DOWNLOAD PDF