Saturday 31 October 2020

பனங்கிழங்கில் பர்பி, அல்வா... ஆசிரியரின் புதிய முயற்சி..‌.! காணொளி


 

காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள் EXTREMELY RARE PHOTOGRAPHS

.

தமிழகத்தில் நவம்பர் 16 முதல் 9, 10,11மற்றும் 12 வகுப்புகள் செயல்படும்.- தமிழக அரசு. காணொளி.

 



பள்ளிகளை திறக்க தற்போதைக்கு சாத்தியக்கூறுகள் இல்லை - மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.. காணொளி


 

மாஸ்க் அணியாவிட்டால் வீட்டுக்கு கடிதம் நெல்லை போலீசின் நூதன தண்டனை... காணொளி

 



இந்தியாவின் முதல் கடல் விமான சேவைகள் இன்று துவக்கம்.../seaplane service / Gujarat.. மேதகு பாரத பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்... காணொளி

 



Thursday 29 October 2020

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிட்டது‌ - தமிழக அரசு


 

*IFHRMS உடன் இணைக்கப்படுவதால் CPS "Missing Credits" விபரங்களை 10.11.2020க்குள் சரிசெய்ய அரசுத் தகவல் மைய (Govt. Data Centre) ஆணையர் உத்தரவு!!!*

 


CLICK HERE TO DOWNLOAD PDF

*கீ‌.வ‌‌.குப்பம் ஒன்றியம்,வேலூர் மாவட்டம்.* *தலைமை ஆசிரியர் கூட்டம் நாள் 29-10- 2020 இடம் பி.கே.புரம்* *புதிய வயதுவந்தோர் கல்வி திட்டம் - கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, தலைமையாசிரியர் கூட்டம் இன்று வியாழக்கிழமை இரண்டு கட்டமாக நடைபறுகிறது.* *முதற்கட்டம் நடைபெற்ற பொழுது. எடுக்கப்பட்ட படங்கள்...*👇

 







*🌎🙋‍♂புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் - கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள்*


*பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம், சென்னை-06*

*புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் - கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள்*

*வழங்குதல் - சார்பு*

*1 மத்திய அரசு கடித எண் No9-3/2020-NLM.1, நாள் 08.05.2020,30.09.2020,14.10.2020 திட்ட ஒப்புதல் வாரியக் கூட்டம் (Project Approval Board(PAB)* .

*நாள் 21.10.2020)*

*அரசு கடித எண் 16620/MS/2020, நாள் 07.10.2020,*

*4. சென்னை -06, பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கக ந.க.எண் 743/ஆ2/2020 நாள் - 20.10.2020,*

*பார்வையிற் காணும் மத்திய அரசின் கடிதங்கள் மற்றும் 21.10.2020 அன்று நடைபெற்ற Project Approval Board(PAB) கூட்ட முடிவுகளின் படி, தமிழகத்தில், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதவும் படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு, அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில், தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இப்புதிய வயது வந்தோர் கல்வி திட்டமானது, முற்றிலும் தன்னார்வலர்களைக் கொண்டு Volunteer Mode அடிப்படையில் மட்டும் செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது*

*குறிப்பாக, அண்மையில் முடிந்த கற்கும் பாரதம் திட்டமானது, தமிழகத்தில், அரியலூரார், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில், 108 ஊரக ஒன்றியங்களில், 3602 கிராம பஞ்சாயத்து அளவில், 2001 மக்கள் தொகைக்கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 25.39 இலட்சம் கல்லாதோருக்கு அடிப்படை, எழுத்தறிவை வழங்கி சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது*

*மாவட்டங்களில் கல்லாதோர் எண்ணிக்கை:*

*2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், 15 வயதுக்குமேற்பட்ட 124கோடி பேர் முற்றிலும் எழுதவும் படிக்கவும் தெரியாதவர்களாக உள்ளது தெரியவந்துள்ளது. இவ்விவரங்கள் இணைப்பு -ல் கொடுக்கப்பட்டுள்ளது*

*மாவட்டங்களில் உள்ள கல்லாதோர் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவை வழங்கினால் மட்டுமே மாவட்டங்களில் கல்வியில் ஒட்டுமொத்த வளர்ச்சி என்கிற இலக்கை அடைய முடியும். இதனைக் கருத்திற்கொண்டு, முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும், 15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத 1.24 கோடியில் முதற்கட்டமாக* 

*3,10,000 கல்லாதோருக்கு நவம்பர்-2020 முதல் பிப்ரவரி-2021-க்குள் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் வகையில் "கற்போம் எழுதுவோம் இயக்கம்" என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தை செயல்படுத்திட பார்வையிற் காண் வழிக்காட்டுதல்களின்படி இவ்வியக்ககத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது மாவட்ட வாரியான முதற்கட்ட கல்லாதோரின் எண்ணிக்கை இலக்கு (Target) இணைப்பு-2ல் கொடுக்கப்பட்டுள்ளது.*

*அனைத்து மாவட்டங்களிலும், சார்ந்த மாவட்ட ஆட்சியர் (District Collector)*

*தலைமையின் கீழ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்ட*
*மற்றும் வட்டாரக் கல்வி அதரவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முதன்மைக் கல்வி*

*அதுவலரின் நேர்முக உதவியாளர் (உயர் நிலைக் கல்வி), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன*
*முதல்வர் (DIET), ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட உதவித் திட்ட அலுவலர்கள்*

*புள்ளியியல் அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (சமக்ர சிக்ஷா), அனைத்து ஊரக*

*மற்றும் நகர்புற ஒன்றியங்களிலுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட வட்டார வளமைய*

*(பொறுப்பு) மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள்*

*ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள்,*
*100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் அங்கன்வாடி*
*மைய பணியாளர்கள், கிராம கல்விக் குழு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்*
*தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர அரசு தொடர்புடைய திட்டங்களின்*

*ஒருங்கிணைப்புடன், "கற்போம் எழுதுவோம் இயக்கம்” என்கிற புதிய வயது வந்தோர் கல்வித்திட்டத்தைக்*
*கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகளின் படி செயல்படுத்திட*
*திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இவ்வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றி,*
*இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்திடுட உரிய நடவடிக்கைகளை* *உடனடியாக*
*மேற்கொள்ளுமாறு*
*அனைத்து*
*கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்*

*1 கல்லாதோரின் விவரங்களைச் சேகரித்தல் :*

*மாவட்ட*
*முதன்மைக் கல்வி அலுவலர்கள்*

*அனைத்து மாவட்டங்களிலும், வாரக மற்றும் நகர்புற ஒன்றியங்களில் அந்தந்த மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, 15 வயதுக்குமேற்பட்ட, முற்றிலும் எழுதவும், படிக்கவும்*

*தெரியாத கல்லாதோரின் எண்ணிக்கை இலக்கை (Target அடிப்படையாகக் கொண்டு இணைப்பு-3ல் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில், பின்வருமாறு கல்லாதோரின் விவரங்களைச் மிக விரைவாகச் சேகரிக்க வேண்டும்*

 *ஒவ்வொரு கிராமங்கள் / வார்டுகள் அளவில், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களில் / அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே பராமரிக்கப்படுகின்ற குடும்ப விவரம் / சர்வே பதிவேட்டில் "கல்வி நிலை" என்கிற பகுதியில் உள்ள 15 வயதுக்குமேற்பட்ட கல்லாதோரின் விவரங்ளை, அருகே உள்ள அரசு ! அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் உதவியுடன் பெறுதல். வட்டார வளர்ச்சி அலுவலகம் அல்லது அதன் தொடர்புடைய அலுவலகங்களில் பராமரிக்கப்படும் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களின் பதிவேடுகள், மகளிர் சுய உதவிக் குழு சார்ந்த பதிவேடுகள் வாயிலாக கல்லாதோரின் விவரங்களைச் சேகரித்தல்*

*பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் உதவியுடன் கல்லாதோரின் விவரங்களைச்*

*சேகரித்தல்*

*நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண, சாரணியர், தேசிய மாணவர் படை மாணவர்களின் உதவியுடன் கய்லாதோரின் விவரங்களைச் சேகரித்தல்*

*மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் உதவியுடன் கல்லாதோரின் விவரங்களைச் சேகரித்தல்*

 *100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களின் உதவியுடன் கல்லாதோரின் விவரங்களைச்*
*சேகரித்தல்*

*கிராம கல்விக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும்*

*பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களின் உதவியுடன் கல்யாதோரின் விவரங்களைச் சேகரித்தல் நேரு யுவகேந்ரா, தமிழ்நாடு அறிவியல் மன்றம் மற்றும் மாவட்ட ஒன்றிய அளவில் சிறப்பாக செயல்படுகின்ற தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் கல்லாதோரின்*
*விவரங்களைச் சேகரித்தல்*

*ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விருப்பமுள்ள ஆசிரியர்கள் பணியாளர்கள்*

*படித்த இளைஞர்கள், வயது வந்தோர் கல்வித் திட்டங்களில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் மற்றும் தள்ளர்வலர்களின் உதவியுடன் கல்லாதோரின் விவரங்களைச் சேகரித்தல்*

*மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின் படி இணைப்பு-3-ல் உள்ள படிவத்தில்*
*சேகரித்த விவரங்களை வருகின்ற 16.11.2020க்குள் இவ்வியக்ககத்திற்கு சமர்பித்திட*
*அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*

*கற்போர் கல்வியறிவு மையங்கள் (Literacy Centers) : அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கற்போர்*
*கல்வியறிவு மையங்களாகச் செயல்படும்.*

*ஒவ்வொரு கற்றல் மையமும், குறைந்த பட்சம் 20 மற்றும் அதற்கும் அதிகமான*
*எண்ணிக்கையில்*

*கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் வகையில் தெரியாதவர்களின் புள்ளி விவரங்களை சார்ந்த மையங்களுக்கு வழங்கிட வேண்டும். இப்பணியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட புள்ளியியல் அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து ஊரக மற்றும் நகர்புற ஒன்றியங்களிலுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட*  *2011 மக்கள் தொகைக் வட்டார வளமைய பொறுப்பு*

*செயல்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் * 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களின் படி, அந்தந்த மையங்கள் சார்ந்த குடியிருப்புப் பகுதிகளிலுள்ள முற்றிலும் எழுத மற்றும் படிக்கத்*

*மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரை ஈடுபத்திட வேண்டும் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அமைய உள்ள கற்போர் கல்வியறிவு மையங்கள் (Literacy Centers) வருகின்ற 23.11. 2020 முதல் செயல்பட உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களின் படி, கல்லாதோர்*
*இலக்கினை நிறைவு செய்யும் வரை (திட்ட காலத்திற்குள்) மையம் செயல்பட*
*அனுமதிக்கப்படும்*
*மைய கற்பித்தல் செயல்பாடுகளுக்கு தன்னார்வலர்களைக் கண்டறிதல் :* *கற்போர் கல்வியறிவு மையம் செயல்பட அனுமதிக்கப்படும் அனைத்து அரசு / அரசு*
*உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளினுடைய தலைமையாசிரியர், தமது பள்ளி மேலாண்மைக் குழு (SMC) அல்லது பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் (PTA)*

*ஒத்துழைப்புடன் தன்னார்வலர்களை கண்டறிந்து சுற்போர் கல்வியறிவு மையத்தினை செயல்படுத்திட வேண்டும்* *ஏற்களவே நடந்து முடிந்த கற்கும் பாரதம் திட்ட விதியில் குறிப்பிட்டுள்ள, கற்போர்*
*மையங்களுக்கான கல்வித் தன்னார்வலர்களின் குறைந்த பட்ச கல்வித் தகுதி 10 ஆம்*

*வகுப்பு தேர்ச்சி) எனக் கொள்ளப்படும். வயது வந்தோர் கல்வித் திட்டங்களில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் மைய தன்னார்வலர்களாகச் செயலாற்றலாம்*

*கல்வி தன்னார்வலர்களாக செயல்பட பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட*
*வேண்டும்*

*பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண சாரணியர், தேசிய மாணவர் படை மாணவர்கள் தன்னார்வலர்களாகச் செய்யாற்றலாம்*

*கல்வி தன்னார்வலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிட இத்திட்ட விதிகளில் வழிவகை*

*எதும் செய்யப்படவில்லை. இருப்பினும், ஒவ்வொரு கட்ட கற்பித்தல் மற்றும் கற்றல்*
*செயல்பாட்டுக் காலத்தில் (EACH TERM) குறைந்த பட்சம் 20க்கும் மேற்பட்ட*

*கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி (Basic Literacy) வழங்கி, தேர்ச்சி*
*பெற வைக்கும் கல்வி தன்னார்வலர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அவர்களால் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்படும் முன்குறிப்பிட்டுள்ளடபடி கண்டறியப்பட்ட கல்லித் தன்னார்வலர்களின் விலாங்களை இணைப்பு 4 ல் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தின் படி வருகின்ற 16,11.2020க்கும் இவ்வியக்ககத்திற்கு. தவறாது சமர்பித்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி*
*அலுவர்களும் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்,*

*கற்போர் கல்வியறிவு மையங்களின் செயல்பாடுகள்:* *ஒரு கல்வியாண்டில் ஒவ்வொரு 4 பாதங்கள் ஒரு கட்டம் என 3 கட்டங்களாகப் பிரித்து செயல்படுத்தப்படும்*

 *முதற்கட்டம்: May-August, இரண்டாம் கட்டம் September-December மற்றும் மூன்றாம் கட்டம்: January-April*

 *ஒவ்வொரு கட்டத்திலும், கல்வியறிவு மையங்களில் 120 மணி நேரம் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்டறியப்பட்ட கல்லாதோருக்கு ஏதுவாக பள்ளி வேலை நாட்களில் மட்டும், ஒரு*

*நாளைக்கு 2 மணி நேரம் மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.*

*ஒரு ஆண்டில் மூன்று முறை கற்போருக்கு இறுதி மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும்.*

*அதாவது, ஒவ்வொரு கட்ட இறுதியிலும் தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனத்தின்*

*(NIOS) வாயிலாக கற்போருக்கு இறுதி மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும் இறுதி மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும் மாதம்: முதற்கட்டம்: April/May, இரண்டாம் சுட்டம்: August/September மற்றும் மூன்றாம் கட்டம்: December/January * மேற் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாட்டுக் கால வரையறைக்குள், கண்டறியப்பட்ட*

*ஒவ்வொரு கல்லாதோரும் குறைந்த பட்சம் 2 மணி நேரம் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி*
*பயின்றிட, கல்வித் தன்னார்வலர்களின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*

*100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள்*

*தொழிற்சாலை மற்றும் அரசு, அரசு சாரா மற்றும் பொதுப்பணித்துறைகளில் பணிபுரிபவர்களுள் உள்ள கல்லாதோருக்கு அவரவர் பணியிடத்திலேயே அவர்களுக்கு*

*எதுவான நேரத்தில் கற்பித்தல் கற்றல் செயல்பாடுகளை கல்வி தன்னார்வலர்களின் வாயியாக மேற்கொள்ள வேண்டும். (Work-Field Based Education) அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட பாவட்ட கிளை சிறைச் சாலை மற்றும் மத்திய*
*சிறைச்சாலை வளாகங்களிலுள்ள முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத*
*சிறைவாசிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் அடிப்படைக் கல்வி வழங்கிட சார்ந்த சிறை நிருவாகத்தின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டும். (Prison Based Education) * கற்போரின் கற்றல் செயல்பாடுகளை ஊக்குவிக்க வீட்டு வழிக் கல்வி முறையையும் (Home Based Education) பின்பற்ற நடவடிக்கை பாடுக்க வேண்டும்.*

 *பல்கலைகழக மற்றும் கல்லூரி மாணவர்களைக் கொண்டு OUTREACH Based*

*Education (extonsion of social service) அடிப்படையில் சுற்போரின் கற்றல்*

*செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும்.*

*4) கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி*

*கற்போர் கல்வி மைய, கல்வி தன்னார்வலர்களுக்கு (Volunteer Teachers) அடிப்படை எழுத்தறிவுக் கல்விச் செயல்பாடுகளுக்கான கற்போர் கட்டக பயிற்சி மற்றும் இதர பயிற்சிகளானது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன், திட்டமிடப்பட்டு பாதியம், மாவட்டம் மற்றும் கல்வி பாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஒருங்கிணைப்புடன்*
*நடத்தப்படும்*

*திட்டமிடப்பட்டுள்ள பயிற்சிகள்*

*தமிழகத்தில், நடப்பு 2020-2021ஆம் ஆண்டில் கற்போம் எழுதுவோம் இயக்கம் திட்டம் தொடக்கத்தினை கருத்தில் கொண்டு, பின்வரும் பயிற்சிகள் உடனடியாக வழங்கிடத் திட்டமிடப்பட்டுள்ளன,*

*பயிற்சியின்போது பெயர்*

*நிலை*

*மாநில அளவில்*

*மாவட்ட அளவில்*

*அனைத்து கல்வி மாவட்ட*
*அளவில்*

*தேதி 05.11.2020 -06.11.2020*

*திட்ட அறிமுகம் மற்றும்*

*அடிப்படை எழுத்தறியும்*

*கல்வி பயிற்சி*

*பயிற்சி பெறுபவர்கள் பாவப் கருத்தாளர்கள்*

*- (பல்பொரு பாட்டத்திலும் 2 ஆசிரியர் பயிற்றுக்கர் மற்றும் 1 ஆசிரியர்*

*10.11.2020 - ILI1.2020 ஒன்றிய கருத்தாளர்கள்*

*- ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2 ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்)*

*18.11.2020 - 19.TL2020 |* *அனைத்து மைய கல்வி*
*தன்னார்வலர்கள்*

*5.மையங்களுக்கு கட்டகங்கள் மற்றும் இதர பொருட்கள் வழங்குதல்* *கற்போர்களுக்கான கட்டகம் (Leamers - Primer), இதர தேவையான பயிற்சிக் கட்டகங்காளா மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கினணப்புடன் தயாரித்து இல்வியக்ககத்தினால் வழங்கப்படும்*

*கற்பித்தல் மற்றும் கற்றல் பொருட்கள்*

 *கற்போர் கல்வியறிவு செபயங்களுக்குத் தேவையான கற்பித்தல் மற்றும் கற்றல் பொருட்கள் இவ்வியக்ககத்தினால் திட்டமிடப்பட்டு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவயர்களின் வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்*

*7 முக்கிய குறிப்பு: முதற்கட்டம்)*

 *2020 நவம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் கற்போர் கல்வியறிவு மையங்கள் பின்வரும் அட்டவனையின் படி செயல்படத் துவங்கும்.*

*2020 நவம்பர் மாதம் 23ஆம் தேதி முதல்*

*30.1. 2020 வரை*

*மையங்களின் கற்போருக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகளின் நேர நிர்ணயம்*

*10 மணி நேரம்*

*40  நேரம்*

*40 மணி நேரம்*

*30 மணி நேரம்*

*120 மணி நேரம்*

*பிப்ரவரி-2021 மாத இறுதியில்*

*நடத்தப்படும்*

*2 | டிசம்பர்-2020*

*3 ஜனவரி-2021)*

*4*

*பிப்ரவரி 2021)*

*மொத்தம்*

*இறுதி மதிப்பீட்டுத் தேர்வு*

*தமிழகத்தில், நடப்பு 2020-2021,ஆம் ஆண்டில் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற திட்டம் தொடக்கத்தினை கருத்தில் கொண்டு, கற்போருக்கான முதற்கட்ட இறுதி மதிப்பீட்டுத் தேர்வு பிப்ரவரி-202-ன் மாதத்தின்) கடைசி வாரத்தில் (Last week of*

*Feb - 2021) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது*

*திட்டம் கண்காணிப்பு*

*மாநில அளவில்;*

*> பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்*

*மாவட்ட அளவில்*

*திட்டச் செயல்பாடுகள் மாவட்ட ஆட்சியரின் தலைமையின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மாவட்டக்கல்விக் குழு, சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வாயிலாக*

*அந்தந்த மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட உதவித் திட்ட அலுவலரின் ஒருங்கிணைப்புடன் கண்காணிக்கப்படும். மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர் நிலைக் கல்வி மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோருக்கு ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை இவ்வியக்ககத்தினால் ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து நடத்தப்படவேண்டும். மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள், மற்றும் உதவித் திட்ட அலுவலர் (SSA), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு வார இறுதியிலும் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதுவலரின் வாயிலாகவும் ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.*

*ஊரக மற்றும் நகர் புற ஒன்றியம் / மைய அளவில்*

*ஒன்றிய அளவில் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலரின் ஒருங்கினைப்புடன், அந்தந்த ஒன்றிய வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், கற்போர் கல்வி மையங்கள் சார்ந்த*
*திட்டம் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் - ஒவ்வொரு வார இறுதியிலும், வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஊரக மற்றும் நகர் புற ஒன்றிய வட்டார வளமைய அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளித் தலைமை*
*ஆசிரியர்கள் ஆகியோருக்கு சார்ந்த மாவட்ட கல்வி அலுவலரின் வாயிலாக ஆய்வுக்*
*கூட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.*

*கல்வி  செயல்பாடு தொடர்ந்து ஆய்வு செய்திடத் தேவையான படிவம் இணைப்பு-5ல் கொடுக்கப்பட்டுள்ளது*

*கற்போர் கல்வியறிவு பையங்கள் பார்வை*

*கற்போர் கல்வியறிவு பைய செயல்பாடுகளை சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி*
*அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட*
*முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர் நிலைக் கல்வி), ஒருங்கிணைந்த*
*பள்ளிக் கல்வித் திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (சாமக்ர சிக்ஷா), புள்ளியியல் அலுவலர், காரசு மற்றும் நகர்புற ஒன்றியங்களிலுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட டார வளமைய பொறுப்பு) மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், மாவட்ட ஆசிரியர் வட்டார பயிற்சி நிறுவன முதல்வர்கள் (DIET), விரிவுரையாளர்கள் ஆகிய அனைவரும் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 20 மையங்களுக்கு குறையாமல் தொடர்ந்து பார்வையிட்டு அறிக்கையினை அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தங்கள் மாவட்டத்தில் அமையவுள்ள கற்போர் கல்வியறிவு மையங்களின் எண்ணிக்கையை மேற்குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்கள் அனைவருக்கும் சமயாக பிரித்து கொண்டு மையங்களின் தொடர் பார்வையை உறுதி செய்ய வேண்டும்*

*திட்ட செயல்பாடுகளுக்கான பிரத்யேக கைபேசி செயலி*

*மத்திய அரசு கல்வி அமைச்சகத்தினாய் வடிவமைக்கப்ட்டுள்ள திட்ட கண்காணிப்பு பணிகளுக்கான பிரத்யேசு கைபேசி செயலி (Mobile APP) சார்ந்த விவரங்கள் இவ்வியக்ககத்தினால் விரைவில் வழங்கப்படும்.*

*திட்ட நிதி ஒதுக்கீடு 2011 மக்கள் தொயிைன் அடிப்படையில் மாவட்டங்களுக்கான திட்ட நிதி ஒதுக்கீடு மத்திய மாநில அரசுகளிடம் கிடைக்கப்பெற்றவுடன் பின்னர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு இவ்வியக்கத்தால் தெரிவிக்கப்படும். புதியதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஏற்கனவே ஒருங்கிணைந்து இருந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு நிதி விடுவிக்கப்பட்டு நிதி மேலாண்மை மேற்கொள்ளப்படும்.*

*திட்ட நிதி மேலாண்மை சார்ந்த சுற்றறிக்கை பின்னர் இவ்வியக்கத்தால் வழங்கப்படும் 12.கொரோனோ வைரஸ் தொற்று பரவல் - பாதுகாப்புச் செயல்பாடுகள்*

*மத்திய அரசு மற்றும் தமிழக அரசால் வழங்கியுள்ள கொரோனோ வைரஸ் (COVID-19) தொற்று பரவலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றி, இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள கற்போர் கற்றல் மையங்களில், கற்போருக்கு தேவையான சானிடைசர்,*

*சோப்பு மற்றும் முக கவசம் வழங்கிடும் வகையில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் தவறாமல் செய்யப்படவேண்டும். கற்போர் சமையங்களில் இதே போன்று மாவட்டம் மற்றும் கல்வி மாவட்ட அளவில் நடத்தப்படும் அனைத்து பயிற்சிகளில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் அனைவரும் சமூக இடையெளியுடன் கூடிய உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் பயிற்சியில் பங்கேற்க உரிய நடவடிக்கைகளை தவறாது தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென அணைத்து முதன்மைக்கல்வி அலுவயர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்*

*எனவே, இவ்வழிகாட்டு ரெறிமுறைகளில் தெரிவித்துள்ளவாறு, சுற்போம் எழுதுவோம் இயக்கம் திட்டத்தின் நோக்கத்தினை, முழுமையடைச்செய்து சிறப்பாகச் செயல்படுத்திடத் தேவையான உரிய தொடர் நடவடிக்கைகளை, எவ்விதத் தொய்விற்கும் இடமளிக்காமல் தங்கள் மாவட்டத்தில் தொடர்ந்து பேற்கொண்டிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு*

*1 மாவட்ட வாரியான மொத்த கல்லாதோர் எண்ணிக்கை மாவட்ட வாரியான மொத்த கல்லாதோர் இலக்கு கல்லாதோர் கணக்கெடுப்பு படிவம் 4. தன்னார்வலர் விவரப்படிவம் கண்காணிப்பு படிவம்*

*இயக்குநர் பள்ளிசாரா மற்றும் பயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை -06*

🌎🌎🌎🌎🌎🌎🌎

Wednesday 28 October 2020

புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் - கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள்


 CLICK HERE TO DOWNLOAD PDF

பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க ஊராட்சி அளவில் புதிய குழு - தமிழக அரசு உத்தரவு

 

. CLICK HERE TO DOWNLOAD THE GO

*🌎🙋‍♂பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க ஊராட்சி அளவில் புதிய குழு - தமிழக அரசு உத்தரவு*


*கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிடும் வகையில் கிராம ஊராட்சி அளவில் கீழ்காணும் 5 குழுக்களை அமைப்பதற்கான வழிமுறைகளை வகுத்து பார்வையில் காணும் அரசாணையில் தமிழக அரசு உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.*

*கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த தமிழக அரசு அறிவித்த 5 குழுக்கள் :*

*1. நியமனக்குழு*

*2.வளர்ச்சி குழு*

*3.வேளாண்மை*

*4. நீர்வள மேலாண்மை குழு*

*5. பணிகள் குழு*

*கல்விக் குழு*

*ஒவ்வொரு ஊராட்சியிலும் கல்விக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும்.*

*இக்குழுவின் தலைவராக கீழ்க்காணும் ஐந்து உறுப்பினர்களுள் ஒருவரை கிராம ஊராட்சி மன்றம் தேர்வு செய்ய வேண்டும்.*

*உறுப்பினர்கள்*

*1. பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதி*

*2. சுய உதவிக் குழு பிரதிநிதி*

*3. அரசு சாரா அமைப்பைச் சார்ந்த பிரதிநிதி*

*4. உள்ளூர் தொடக்க அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / தலைமை ஆசிரியை*

*5. சத்துணவு அமைப்பாளர்*

*முக்கியமான பணிகள்*

*ஊராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல் பொது மக்களின் பங்களிப்புடன் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாடு அடைய செய்தல்.*

*அனைவருக்கும் கல்வி , முறை சாரா கல்வி , நூலக மேம்பாடு , எழுத்தறிவு மற்றும் கிராமப்புற மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதற்கான உத்திகளை வகுத்தல்.*


Monday 26 October 2020

கல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?

 




CLICK HERE TO DOWNLOAD-Remedies on Loss of Certificate(Duplicate mark certificate and tc)


..*கல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?*


*நடைமுறைகள்:*


*பள்ளி மாற்றுச் சான்றிதழ்*


*இணைக்க வேண்டிய ஆவணங்கள்*


*கல்லூரிச் மாற்றுச் சான்றிதழ்*


*பள்ளி மதிப்பெண் சான்றிதழ்*


*கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்*


*தனித்தேர்வர்களுக்கு*


*குறிப்பு:*


*வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.*


*ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை.*


*தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும்.*


*நடைமுறைகள்:*


*முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.*


*அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.*


*இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.*


*பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.*


*இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.*


*சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.*


*பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.*


*மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.*


*அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.*


*சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.*


*இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்.*


*பள்ளி மாற்றுச் சான்றிதழ்*


*பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.*


*விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்ற சான்றிதழை வாங்கி இணைத்துக் கொடுக்க வேண்டும். இத்துடன் பள்ளிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.*


 *எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமே விண்ணப்பிக்கலாம்.*


*இணைக்க வேண்டிய ஆவணங்கள்*


*மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், கட்டணம் செலுத்திய ரசீது.*


*கல்லூரிச் மாற்றுச் சான்றிதழ்*


*கல்லூரி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.* 


*அத்துடன் சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும். அவர் அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்தது உண்மை எனச் சான்று வழங்குவார்.*


*பின்னர் காவல்துறை அளித்த சான்று, வட்டாட்சியர் அளித்த சான்று இவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணத்தைச் செலுத்தி கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.*


*பள்ளி மதிப்பெண் சான்றிதழ்*


*பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் முதலில் அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்.*


*அத்துடன் மதிப்பெண் பட்டியலின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம், மாதம் ஆகிவற்றைக் குறிப்பிட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு முன்னணி நாளிதழில் அறிவிப்பு விளம்பரம் வெளியிட வேண்டும்.*


*பின்னர் காவல் நிலையத்தில் புகாரளித்ததற்கான ரசீது, பிரசுரமான விளம்பரம் ஆகியவற்றை இணைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.*


*இதனுடன் தேடுதல் கட்டணம் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.*


*மனுவைப் பரிசீலித்து மாவட்டக் கல்வி அதிகாரி மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பம் செய்வார்.*


*கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்*


*கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.*


*விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மதிப்பெண் சான்றிதழின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றைச் சரிபார்த்து பல்கலைக்கழக  தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குப் பரிந்துரைத்து எழுதுவார்.*


*இத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவைப் பெற்றுக் கொண்ட தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.*


*விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்.*


*தனித்தேர்வர்களுக்கு*

*தனித்தேர்வர்கள் நேரடியாக  தேர்வுத்துறை இயக்குநர்  அலுவலகத்திற்கு  விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.  பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு  சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.*


*குறிப்பு:*

*பள்ளி / கல்லூரி மாற்றுச் சான்றிதழ்கள், பள்ளி / கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரையோ அல்லது கல்லூரி முதல்வரையோ அணுகி மேலதிக விவரங்களையும், கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.*


Saturday 24 October 2020

முன் அனுமதி பெற்று உயர்கல்வி பயின்ற அனைத்து ஆசிரியர்களின் அன்பான கவனத்திற்கு

 

அரசு தொடக்க/ நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய படிவம். CLICK HERE TO DOWNLOAD PDF


*முன் அனுமதி பெற்று உயர்கல்வி பயின்ற  அனைத்து ஆசிரியர்களின் அன்பான கவனத்திற்கு!!!!*


09-03-2020 க்கு முன்னர் உயர் கல்வி தகுதி பெற்று இதுநாள் வரை ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்கள் 

உரிய இணைப்புகளுடன்


 27.10.2020 செவ்வாய்க்கிழமைக்குள் 5  பிரதிகளுடன் (உரிய அசல் சான்றிதழ்கள் கையில் வைத்துக் கொண்டு) இணைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் நேரிடையாக அளிக்க வேண்டுகிறோம்.


(28-10-2020ஆம் தேதி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியிருப்பதால் உரிய நேரத்தில் ஒப்படைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்)...


இணைப்பு


1.முகப்பு கடிதம்-உரிய வழியாக

2.கருத்துரு படிவம்.

3.பட்ட சான்றிதழ் நகல் ( UG,PG,BEd)

4.உண்மைத்தன்மை சான்றிதழ் நகல் (UG,PG,BEd)

5.இறுதித் தேர்வு கால அட்டவணை நகல் 

6.துறை முன் அனுமதி நகல் (UG,PG,BEd)

7.இறுதி தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket)

8.பணி நியமன ஆணை நகல்


( பின்னேற்பு வேண்டி விண்ணப்பித்தவர்களைத் தவிர)

Sunday 18 October 2020

உணவு பேக்கிங்கின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ்... காணொளி

 



நவம்பர் டிசம்பர் மாதங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு பிரதீப் ஜான் வானிலை ஆர்வலர்... காணொளி

 



பள்ளிகள் திறக்கப்படுமா? - மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை... காணொளி

 



கடல்கள் இல்லாத உலகம் இப்படித்தான் இருக்கும்... காணொளி

 



அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே நீட் இலவச பயிற்சி - மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன்... காணொளி

 



தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு எங்கெல்லாம் தெரியுமா? காணொளி

 



Friday 16 October 2020

"ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து" - தமிழக தலைமைச் செயலாளர்... காணொளி

 



ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி மகன். அரசுப்பள்ளி மாணவன் நீட் தேர்வில் சாதனை... காணொளி

 



G.O 116-DATE- 15.10.2020-உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து -ஆசிரியர்கள் , மருத்துவர்கள் ,பொறியாளர்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்- பணியாளர்கள் மற்றும் சீர்திருத்த துறை விளக்கம்

 


CLICK HERE TO DOWNLOAD PDF

NEET தேர்வு முடிவுகள் வெளியானது. காணொளி

 



ஆந்திர மாநிலத்தில் பள்ளிகளில் மாணவர்களின் ஜாதி மதத்தை வருகைப்பதிவேட்டில் குறிப்பிடக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை. காணொளி

 



Thursday 15 October 2020

NISHTHA ( National Initiative for School Heads and Teachers Holistic Advancement ) பயிற்சி வழிகாட்டுதல்கள்.

 



Click Here To Download pdf - NISHTHA Training - SSA Instructions.


*NISHTHA ( National Initiative for School Heads and Teachers Holistic Advancement ) பயிற்சி வழிகாட்டுதல்கள்*


*1 முதல் 8 ம் வகுப்பு எடுக்கும் அனைத்துவகை பள்ளி ஆசிரியர்களும் ( அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / நர்சரி & பிரைமரி ) DIET விரிவுரையாளர்கள் , வட்டார கல்வி அலுவலர்கள் , மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் பயிற்சியில் பங்கு பெறுதல் வேண்டும்.* 


*பயிற்சியில் மொத்தம் 18 பாடநெறிகள் ( Course ) உள்ளன . 15 நாட்களுக்கு 3 பாடநெறிகள் என்ற அடிப்படையில் அக்டோபர் - 16-2020 முதல் ஜனவரி 15-2021 வரை நடைபெறும் . - தமிழ் மற்றும் ஆங்கில வழியில் உள்ளன .* 


*EMIS இணையதளத்தில் TNDIKSHA வை click செய்து அல்லது DIKSHA App பதிவிறக்கம் செய்து பயிற்சியில் பங்கு பெறலாம் .* 


*( Enter Basic Details , Mobile No.- OTP ) Login - > Username - > Password - teacherID)*


*Password பெற EMIS இணையதளத்தில் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.* 


*(School Login - > staff Detail - > Staff Login Detail - > TeacherID - > Password)*


*கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள வரிசையில் ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கு பெறுதல் வேண்டும் . பாடநெறியில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும் ஆசிரியர்கள் நிறைவு செய்தல் வேண்டும்*


*(Demonstration - > Transcript - > Activity)*


*பாடநெறியில் ஏதெனும் சந்தேகம் இருப்பின் Telegram குழுவில் உள்ள Resource Person- னிடம் தெளிவு பெற்று கொள்ளலாம்.* 


*பாடப்பொருளை ஆசிரியர்கள் குறிப்பு எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.*


*சுயநிதி பள்ளிகள் 1 முதல் 8 வகுப்பு வரை கையாளும் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் பங்குபெறுவதை மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.*


*பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் Telegram app download செய்தல் வேண்டும்.*


*பயிற்சி தொடர்பான தகவல்கள் Telegram app ல் அனுப்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது.*


*அனைத்து பாட நெறிகளும் ( 18 course ) நிறைவு செய்தவுடன் ஜனவரி 2021 மாதத்தில் Complementary Based Assessment தேர்வில் 60 % மேல் எடுப்பவர்களுக்கு Certificate of Merit Online- ல் வழங்கப்படும்.*

தமிழகம் முழுவதும் NISHTHA பயிற்சிக்கு ஆசிரியர்கள் மட்டும் DIKSHA APP இல் LOGIN செய்ய முடிகிறது. தலைமை ஆசிரியர்கள் செய்ய இயலாது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களிடம் கூறப்பட்டிருக்கிறது தீர்வு கிடைக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும்..


 

Tuesday 13 October 2020

ஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு.

 

NISHTHA TRAINING SCHEDULE- CLICK HERE TO DOWNLOAD PDF


*உலகில் ஒவ்வொரு நாளும் அறிவியலிலும் , தொழில் நுட்பத்திலும் மற்ற துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ச்சியும் பெருகிக்கொண்டே வருகின்றன . ஆசிரியர்கள் தற்போதைய மாற்றங்களை அறிந்துக் கொண்டு தங்களது கற்பிக்கும் திறனையும் , தொழில் நுட்ப அறிவையும் அவ்வப்போது பெருக்கிக் கொள்வதும் , கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளுதலும் இன்றியமையாததாகும் . எனவே ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து கற்றல் , கற்றுக் கொண்டே இருத்தல் , அறிவைப் புதுப்பித்தல் ஆகியன மிக அவசியம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது* . 


*2019-20 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசு பள்ளி Ariunite 6. & NISHTHA- National Initiative for School Heads and Teachers ' Holistic Advancement என்ற ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்பட்டது . அப்பயிற்சி வெற்றி பெற்றதன் தொடர்ச்சியாக இக்கல்வியாண்டில் இணைய வழியாக ( Online ) கட்டணமில்லா NISHTHA பாடநெறிகள் ( courses ) பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு , அரசு உதவி பெறும் பள்ளி , Matric மற்றும் Nursery & Primary பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு வழங்க மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது . கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற NISHTHA பயிற்சியில் வழங்கப்பட்ட ஒவ்வொரு தலைப்பின் கீழும் உள்ள கருத்துக்களில் தற்பொழுது இணைய வழியில் வழங்கும் விதமாக பல்வேறு மாற்றங்களை NCERT மேற்கொண்டுள்ளது . இதில் பல்வேறு செயல்பாடுகள் , காணொலிகள் , வினாடி வினா ( Quiz ) இணைக்கப்பட்டு புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளின் அடிப்படையில் 18 பாடநெறிகள் ( courses ) வடிவமைக்கப்பட்டுள்ளன . இதில் புதிதாக COVID 19 நிகழ் சூழ்நிலையினை பள்ளி கல்வியில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை பற்றி ஒரு பாடநெறி இணைக்கப்பட்டுள்ளது* . 


*இக்கல்வியாண்டில் இணைய வழி NISHTHA பாடநெறிகளில் ( Online courses ) கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது . எனவே கடந்த கல்வியாண்டில் பயிற்சி மேற்கொண்ட 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இக்கட்டணமில்லா இணைய வழி NISHTHA பாடநெறிகளில் ( Online courses ) தங்கள் பணி மேம்பாட்டிற்காக பங்கேற்கலாம் . மேலும் கடந்த கல்வியாண்டில் பயிற்சி மேற்கொள்ளாத 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயமாக இணைய வழி NISHTHA பாடநெறிகளில் ( Online courses ) கலந்துகொள்ள வேண்டும் . Digital Infrastructure for Knowledge Sharing ( DIKSHA ) இணைய தளத்தில் இடம்பெற்றுள்ள பாடம் சார் வளங்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் DIKSHA portal மற்றும் Mobile App வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது . எனவே NISHTHA பாடநெறிகள் ( Online courses ) , DIKSHA வழியாக அளிக்கப்படவுள்ளது.*

*NISHTHA பாடநெறிகள் அனைத்து ஆசிரியர்களும் எளிதில் பங்கேற்கும் விதமாக ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது . 15 நாள்களுக்கு 3 courses என்ற அடிப்படையில் 2020 அக்டோபர் 16 முதல் 2021 சனவரி 15 வரை மூன்று மாதத்திற்கு பின்வருமாறு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிக்கான கால அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது*

Wednesday 7 October 2020

இனி அமேசன் செயலி வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்... காணொளி

 


உலகில் மிகவும் அரிதான வெள்ளை வைரம் 15.7 மில்லியன் டாலருக்கு ஏலம்... காணொளி

 



2861 கிராம் ( 2 கிலோ 861 கிராம்) இடையில் உருவான தங்க ஒட்டியாணம்... காணொளி

 



தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.


 

ஆசிரியையாக மாறிய எட்டாம் வகுப்பு மாணவி... காணொளி


 

எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் குறித்த புதிய தகவல்களை வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள்.. காணொளி


 

பார்வையில் கண்டுள்ள அரசாணை களுக்குத் தொடர்ச்சியாக கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறது இதன் தொடர்ச்சியாக பார்வை 4ல் கண்டுள்ள அரசு கடிதத்தில் கல்வி தொலைக்காட்சியில் டாக்டர், A.P.J. அப்துல்கலாம் பிறந்தநாளை ஒட்டி 12.10.2020 முதல் 15.10.2020 முடிய சிறப்பு நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகள் பார்க்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


 

கல்வி

தொலைக்காட்சி சிறப்பு அலுவலர் அவர்களின் செயல்முறைகள், சென்னை - 85 ந.க.எண். 0042/கல்விதொலைக்காட்சி /2020, நாள்:05.10.2020 கல்வி தொலைக்காட்சி, கோட்டூர்புரம், சென்னை - 85, - பொருள்


பார்வை :

A.P.J. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் 15.10.2020 அன்று நிகழ்ச்சிகள் சார்ந்த விவரங்கள் அனுப்புதல் - தொடர்பாக எண்.196 பள்ளிக்


(14 1) நாள்.26.6.2013.

அரசாணை


நாள்.27.08.2019


(91)எண் 340,


பள்ளிக்கல்வித்துறை

அரசாணை (வாலாயம்) எண் 58, பள்ளிக் கல்வி(பக1(1))த்துறை, நாள்.16.06.2020 பள்ளிக்கல்வித்துறை தலைமை செயலகம் சென்னை


ந.க.எண்.15413/GL1(2)2020-1, நாள்.01.10.2020


பார்வையில் கண்டுள்ள அரசாணை களுக்குத் தொடர்ச்சியாக கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறது இதன் தொடர்ச்சியாக பார்வை 4ல் கண்டுள்ள அரசு கடிதத்தில் கல்வி தொலைக்காட்சியில் டாக்டர், A.P.J. அப்துல்கலாம் பிறந்தநாளை ஒட்டி 12.10.2020 முதல் 15.10.2020 முடிய சிறப்பு நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகள் பார்க்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


பெறுநர்


அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள்


சிறப்பு அலுவலர்

கல்வி தொலைக்காட்சி கோட்டூர்புரம், சென்னை - 85.

Monday 5 October 2020

உலகின் மிகப் பெரிய செயற்கை நீரூற்று..‌. காணொளி

 



செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகாமையில் வரும் அரிய நிகழ்வு... காணொளி


 

அக்டோபர் 15 முதல் பள்ளிகள் படிப்படியாக திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய கல்வித்துறை... காணொளி

 



நவம்பரிலும் பள்ளிகள் திறக்க விட்டால் என்ன நடக்கும்? காணொளி

 



அரசுப்பள்ளி மாணவனின் 80 ரூபாய் செலவில்"SOLAR POWER BANK" அரிய கண்டுபிடிப்பு! காணொளி


 

ஆந்திர மாநிலத்தில் 2 பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா... காணொளி

 


ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவ சாத்தியக்கூறு - RBI... காணொளி

 



வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு. காணொளி

 



கொரோனா தடுப்புக்கு இஞ்சி டீ குடிக்குமாறு விஞ்ஞானிகள் பரிந்துரை. காணொளி