Thursday 17 February 2022

எண்ணும் எழுத்தும் இயக்கம் பற்றிய கவிதை - கவிஞர். ந டில்லிபாபு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தாளவாடி, ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் கல்வி மாவட்டம்.


 

*🌎எண்ணும் எழுத்தும் இயக்கம்*


*கண்ணும் கருத்து மாக - நாம் கல்வியை காணுதல் வேண்டும் எண்ணும் எழுத்தும் இயக்கத்தால் - அது இன்னும் நீள வேண்டும் ! ஐந்தில் வளையாத மரந்தான் - அது ஐம்பதில் வளைந்திட லாகுமோ? ஐந்தாம் வகுப்பு வரைதான் - நம் அடிப்படை கல்வி யம்மா! அனைவர்க்கும் கல்வி நிலைதான் - நம் அடிப்படை உரிமை யம்மா ! அனுபவக் கல்வியால் மட்டுமே - நமக்கு அறிவியல் ஞானம் கிட்டுமே !*


*கவிஞர். ந டில்லிபாபு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தாளவாடி, ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் கல்வி மாவட்டம்.*

Wednesday 2 February 2022

வேலூர் மாவட்டம் கீ..வ.குப்பம் ஒன்றியம்- 02-02-2022 முருக்கம்பட்டு ஊராட்சி-பெருமாங்குப்பம் கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் உயர்திரு கோபி அவர்கள் தலைமையேற்று இல்லம் தேடிக்கல்வி மையத்தை குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார்.

 



















இந் நிகழ்வில் AID INDIA. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன்,தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் முனிசாமி,மா.து.தலைவர் வீரா.குமரன்,வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்