Thursday 17 February 2022

எண்ணும் எழுத்தும் இயக்கம் பற்றிய கவிதை - கவிஞர். ந டில்லிபாபு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தாளவாடி, ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் கல்வி மாவட்டம்.


 

*🌎எண்ணும் எழுத்தும் இயக்கம்*


*கண்ணும் கருத்து மாக - நாம் கல்வியை காணுதல் வேண்டும் எண்ணும் எழுத்தும் இயக்கத்தால் - அது இன்னும் நீள வேண்டும் ! ஐந்தில் வளையாத மரந்தான் - அது ஐம்பதில் வளைந்திட லாகுமோ? ஐந்தாம் வகுப்பு வரைதான் - நம் அடிப்படை கல்வி யம்மா! அனைவர்க்கும் கல்வி நிலைதான் - நம் அடிப்படை உரிமை யம்மா ! அனுபவக் கல்வியால் மட்டுமே - நமக்கு அறிவியல் ஞானம் கிட்டுமே !*


*கவிஞர். ந டில்லிபாபு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தாளவாடி, ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் கல்வி மாவட்டம்.*

No comments:

Post a Comment