Tuesday 23 June 2020

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2516 பேருக்கு கொரோனா உறுதி..!



தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2516 பேருக்கு கொரோனா உறுதி..!

தமிழகத்தில் மூன்றாவது நாளாக 2500 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்னும் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில்தான் உள்ளது. கொரோனா பாதிப்பு குறித்த நிலவரத்தை நாள்தோறும் தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் வெளியிடுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 2516 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,603 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44,205 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்த 39 பேர் குறித்த விவரங்கள் இன்றைய செய்தி குறிப்பில் இடம்பெற்றுள்ளது. இதில் 28 பேர் அரசு மருத்துவமனையிலும், 11 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

நன்றி: புதியதலைமுறை

No comments:

Post a Comment