Monday 20 January 2020

அண்மைச் செய்திசெய்தி* *TGETWF* 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.w

*அண்மைச் செய்திசெய்தி*
 *TGETWF*



5 மற்றும் 8ம்
 வகுப்புகளுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே
 நடைபெறும் என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என அரசு அறிவிப்பை வெளியிட்டது அதனை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை தொடக்கக்கல்வித்துறை தீவிரப்படுத்தியது இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது அதில் 5ம் வகுப்பிற்கு 1 கிலோமீட்டர் தொலைவிலும் 8ம் வகுப்பிற்கு மூன்று கிலோமீட்டர் தொலைவில்  தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது..
இந்த அறிவிப்பால்   5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளில்  தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது அரசின் இந்த முடிவு  மாணவர்கள் மற்றும்  பெற்றோர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது..
ஏற்கனவே  5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்து வரக்கூடிய சூழ்நிலையில் தேர்வு மையங்கள் மாணவர்கள் பயில கூடிய பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுத வேண்டிய அரசின் முடிவை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு உட்பட பல அமைப்புகன மற்றும் கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்த

 நிலையில் 5 மற்றும் மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் தாங்கள் பயிலக்கூடிய பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் என்று தொடக்கக் கல்வி இயக்குனரகம் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது..

No comments:

Post a Comment