Sunday 29 December 2019

அறிக்கை 29.12.2019 ============== ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ம் தேதி நடைபெறுகிறது தொடர்ந்து மறுநாளும் நடைபெற வாய்ப்புள்ளதால் பள்ளிகள் திறப்பு தேதியை மற்ற தமிழக தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா. அருணன் வேண்டுகோள்

அறிக்கை
29.12.2019
==============
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ம் தேதி நடைபெறுகிறது தொடர்ந்து மறுநாளும் நடைபெற வாய்ப்புள்ளதால்
பள்ளிகள் திறப்பு தேதியை மற்ற
தமிழக தேர்தல் ஆணையத்திற்கு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில்  நிறுவனத் தலைவர் சா. அருணன் வேண்டுகோள்
===========





ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவித்து முதல்கட்டத் தேர்தல் 27ம் தேதி முடிவடைந்து இரண்டாம் கட்டத் தேர்தல் வருகின்ற 30 ம் தேதி நடைபெறுகிறது  இந்த சூழ்நிலையில்

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகின்றன ஜனவரி 2ம் தேதி நடைபெறுகிறது , வாக்கு சீட்டு என்பதால் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மறுநாள் 3ம் தேதியும்  நீடிக்க வாய்ப்புள்ளதால்

அரையாண்டு விடுமுறை முடிந்து வருகின்ற ஜனவரி 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது ஆசிரியர்கள் தலைமையாசிரியர்கள் பணியாளர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட வேண்டி உள்ளதால் ஆசிரியர்கள் 3ம் தேதி பள்ளிக்கு எப்படி செல்ல முடியும் என்று தெரியவில்லை

ஆதலால் தமிழக தேர்தல் ஆணையம்  அரசுக்கு தெரிவித்து பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்
~~~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044
===========

No comments:

Post a Comment