Sunday 23 February 2020

பிப்ரவரி 24 மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி






*பிப்ரவரி 24 மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி*

*இந்திய குடியனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன்.*

*எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன்.*

*எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வன்முறைகள் மற்றும் எந்தவொரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடும்*

*மேலும், இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.*

*- இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன்.*

*குழந்தை திருமணம் பற்றி தெரிய வந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன்.*

*நான், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன்.*

*உரிமைகள்*

 *இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும்* *ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உடன்படிக்கையில்*

*மீதான வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகள் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்.*

*சோ.மதுமதி அரசுச் செயலாளர்.*

No comments:

Post a Comment