Monday 28 October 2019

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்


சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, மதுரை, புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.


தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment