நன்றி ! நன்றி!!
09.03.2020
~~~~~~~`
கொரோனா வைரஸ் காரணமாக அலுவலகங்கள் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறைக்கு மத்திய அரசு விலக்களித்தது போன்று மாணவர்கள் நலன் கருதி
தமிழக அரசும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறைக்கு தற்காலிகமாக விலக்கு அளித்த தமிழக அரசிற்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்
===========
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் மத்திய அரசு அலுவலகங்களில் மார்ச் 31-ம் தேதி வரை பயோமெட்ரிக் முறைக்கு விலக்கு அளித்து
ஊழியர்கள் ஆசிரியர்கள் வருகை பதிவேடுகளில் மட்டும் தங்களது வருகையை பதிவு செய்ய மத்திய அரசு கீழ் உள்ள அனைத்துத்துறை அலுவலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது
கொரோனா வைரஸ் விரல்கள் மூலம் அதிகம் பரவும் என்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது, காரணம் பயோமெட்ரிக் கருவியில் அடுத்தடுத்து தொடர்ந்து கைவிரல்கள் பதிவிடுவதால் வைரஸ் பரவக்கூடும் இதனால் மாணவர்களுக்கும் பாதிப்படைய வாய்ப்ப்பு என்பதால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு விலக்களிக்க என்று தமிழக அரசிற்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைத்தோம் அதைனையேற்று
இன்று தமிழக அரசு பயோமெட்ரிக் கருவில் தொடர்ந்து கை விரல்கள் பதிவிடுவதால் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்பதை அறிந்து துரித நடவடிக்கையாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களும் அலுக பணியாளர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு விலக்கு அளித்த தமிழக அரசிற்கு பள்ளிக்கல்வித்துறைக்கும்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044
~~~~~~~~
குறிப்பு:
நமது. நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் அரசின் பார்வைக்கு எடுத்து செல்லும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்


No comments:
Post a Comment