Tuesday 31 March 2020

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதாலும் நோய் தொற்றை தவிர்க்க உத்தரவு வேண்டியுள்ளதாலும் கூட்ட நெரிசலைத் தடுக்க நியாயவிலைக் கடைகளில் டோக்கன் சிஸ்டம் பின்பற்றப்பட உள்ளது. 01.04.2020 முதல் தங்கள் வீடுகளுக்கே வந்துட நாளொன்றுத்கு 50 குடும்ப அட்டைகளுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு ஒவ்வொரு நாளும் வழங்கப்படும். மேற்படி டோக்கன்கள் குடும்ப அட்டை காரர்களுக்கு நியாயவிலைக் கடை விற்பனையாளர்களால் பொதுமக்கள் செய்ய வேண்டியவை:



வேலூர் மாவட்டம் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டவாறு கொரோனா வைரஸ் நிவாரண அறிவிப்பு வேலூர் மாவட்டத்தில் உள்ள 3,97,536 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் 2020 மாதத்திற்கான தகுதியான அளவு அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய அனைத்துப் பொருட்களும், ரூ.1,000/- ரொக்கத் தொகையும் வரும் 2.4.2020 முதல் வழங்கப்பட உள்ளது.

தற்போது ஊரடங்கு
அமலில்
உள்ளதாலும்
நோய் தொற்றை தவிர்க்க
உத்தரவு வேண்டியுள்ளதாலும் கூட்ட நெரிசலைத் தடுக்க நியாயவிலைக் கடைகளில் டோக்கன் சிஸ்டம் பின்பற்றப்பட உள்ளது. 01.04.2020 முதல் தங்கள் வீடுகளுக்கே வந்துட நாளொன்றுத்கு 50 குடும்ப அட்டைகளுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு ஒவ்வொரு நாளும் வழங்கப்படும். மேற்படி டோக்கன்கள் குடும்ப அட்டை காரர்களுக்கு நியாயவிலைக் கடை விற்பனையாளர்களால்
பொதுமக்கள் செய்ய வேண்டியவை:

1) அனைவருக்கும் நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கண்டிப்பாக வழங்கப்படும் என்பதால் மக்கள் பதட்டமில்லாமல் பொறுமை காத்து தங்கள் டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் நியாயவிலை கடைக்குச் சென்று 2 மீட்டர் இடைவெளி விட்டு நின்று பொருட்களை பெற்றுச் செல்ல வேண்டும்.

2) பொதுமக்கள் குடும்ப அட்டையை எடுத்துக்கொண்டு கடைக்கு வரும்போது கடையில் வைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி மூலம் தங்களது கை மற்றும் ஸ்மார்ட் குடும்ப அட்டையினை கடை விற்பனையாளரிடம் அளிப்பதற்கு முன்பும், பின்பும் சுத்தம் செய்க கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3) மின்னணு குடும்ப அட்டை இல்லாதவர்கள் குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையையோ அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல்லை (OTP) பயன்படுத்தி பொருட்கள் பெறலாம். வரப்பெறும் ஒருமுறை

4)விற்பனையாளருக்கும், பொருட்கள் வாங்க வரும் அட்டைதாரர்களுக்கும் இரண்டு மீட்டர் இடைவெளி உள்ளவாறு பொருட்கள் வழங்க எதுவாக பிவிசி பைப் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பைப் மூலமாக பொருட்களை பெற்றுச் செல்ல வேண்டும்.

5) கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளவர்களாக கருதப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மட்டும் அவர்களது வீடுகளுக்கே சென்று ரூ.1.000/ மற்றும் நிவாரணப் பொருட்கள் சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் மூலம் வழங்கப்படும், வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

6) இதுகுறித்து புகார் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலக கொலைபேரி எண். 041622525862 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

6) பொதுமக்கள் வெளியில் வரும்போது தங்களது ஸ்மார்ட் குடும்ப அட்டை மற்றும் டோக்கன் ஆகியவற்றை வாகன சோதனையில் உள்ள காவலர்களிடம் காட்ட வேண்டும். இல்லையேல் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

நாள் : 31.03.2020

மாவட்ட ஆட்சித் தலைவர் வேலூர் மாவட்டம்

No comments:

Post a Comment