Tuesday 31 March 2020

செய்தி வெளியீடு எண்: 242 நாள்: 31.03.2020 டெல்லி நிஜாமுதினில் உள்ள தப்லிகி ஜமாத்தின் மர்காஸில் (மையத்தில்), இந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில்1000-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டின்பல பகுதிகளிலிருந்து கலந்துகொண்டதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இவர்களில் பலர் மாநாட்டை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு திரும்ப வந்துவிட்டார்கள்



செய்தி வெளியீடு எண்: 242
நாள்: 31.03.2020

டெல்லி நிஜாமுதினில் உள்ள தப்லிகி ஜமாத்தின் மர்காஸில்
(மையத்தில்), இந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில்1000-க்கும்

மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டின்பல
பகுதிகளிலிருந்து கலந்துகொண்டதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இவர்களில் பலர் மாநாட்டை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு திரும்ப வந்துவிட்டார்கள்.

அவர்களில் பலர் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என்பது தற்போது தெரியவருகிறது. இதில் சிலரை மாவட்ட நிர்வாகத்தால் தொடர்புகொள்ள முடிந்துள்ளது. பலரை மாவட்ட நிர்வாகத்தால் தொடர்புகொள்ள இயலவில்லை. தொடர்புகொள்ள முடியாதவர்கள் தாமாகவே முன் வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால், இவர்களது குடும்பங்களுக்கும், மற்றவர்களுக்கும், நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க இயலும். எனவே, இவர்கள் பொறுப்புடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment