Wednesday, 13 November 2019

.*வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது!

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது

.
 
..ஹைலைட்ஸ்:
வேலூர் மாவட்டம் மூன்று மாவட்டங்களாக பிரிப்பு
புதிய கோட்டங்கள், வட்டங்கள் பிரிப்பு
அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நேரம், தூரம் குறைவதால் மக்கள் மகிழ்ச்சி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களாக பிரிப்பதன் மூலம் அரசு அலுவலகங்களை நோக்கி மக்கள் பயணிக்கும் நேரமும் தூரமும் குறையும். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தை மூன்று மாவட்டங்களாக பிரிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை என்ற மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


திருநெல்வேலி, தென்காசி இனி தனித்தனி!


இந்த மூன்று மாவட்டங்களிலும் அந்தந்த நகரங்களே தலைமையிடங்களாக செயல்படும்.

புதிதாக வரையறுக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம் என்ற இரு வருவாய் கோட்டங்கள் செயல்படவுள்ளன. மேலும் வேலூர், அணைகட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி குப்பம் ஆகிய ஆறு வருவாய் வட்டங்கள் செயல்படவுள்ளன.

திருப்பத்தூர் மாவட்த்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி என்ற இரு வருவாய் கோட்டங்களும் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டராம்பள்ளி, ஆம்பூர் என்ற நான்கு வருவாய் வட்டங்களும் செயல்படவுள்ளன.

ராணிப் பேட்டை மாவட்டத்தில் ராணிபேட்டை, அரக்கோணம் என்ற இரு வருவாய் கோட்டங்களும் வாலஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் என்ற நான்கு வருவாய் வட்டங்களும் பிரிக்கப்பட்டுள்ளன.

இதே போல் திருநெல்வேலி, காஞ்சிபுரம் மாவட்டங்களும் பிரிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment