Monday 19 April 2021

*1முதல், 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வீட்டில் வைத்து தேர்வு நடத்த, பள்ளி கல்வி அதிகாரிகள்* *உத்தரவிட்டுள்ளனர்.* *நாடு முழுதும் கொரோனா பரவல் அதிக ரித்து வருகிறது. அதனால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு கள் கடுமையாக்கப்படு கின்றன. தமிழகத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள், மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.* *இதன் ஒரு கட்டமாக, பள்ளி, கல்லுாரிகள் மூடப் பட்டு, மாணவர்கள் வீட் டில் இருந்தே படிக்கவும், தேர்வு எழுதவும் அறிவு றுத்தப்பட்டு உள்ளனர்.* *பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பொதுத்தேர்வு எழுத வேண்டும்.என கூறப்பட்டுள்ளது.* , *மற்ற மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' என்ற, அனைவருக் கும் தேர்ச்சி வழங்கப்பட் டுள்ளது.* *இந்நிலையில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு, ஒவ்வொரு பள்ளி யிலும், புதிதாக பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட் டுள்ளன.* *இந்த பயிற்சி புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்த கங்களில் உள்ள கேள்விகளுக்கு, மாணவர்கள் வீட் டில் இருந்தே விடை எழுதவேண்டும் என, பள்ளிகளுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.* *மாணவர்களின் கற்றல் திறனை தெரிந்து கொள் ளும் வகையில், இந்த தேர்வு நடத்தப்படுவதாக வும், மாணவர்களை கட்டாயப்படுத்தாமல், பயிற்சி புத்தகங்களில் உள்ள கேள்விகளுக்கு பதில் எழுத அறி வுறுத்துமாறும், தலைமை ஆசிரியர்களுக்கு யோசனை வழங்கப்பட்டுள்ளது.* *'இந்த தேர்வின் முடி வில், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து, மாநில அளவில் பட்டியல் தயாரித்து, மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்ட அறிக்கையில் குறிப்பிடப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.*

No comments:

Post a Comment