Thursday 24 September 2020

"அக்டோபர் 1 முதல் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்குச் செல்லலாம்" - தமிழக அரசு... காணொளி




*அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு!*


*அதாவது 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்*


*50% ஆசிரியர்கள் மட்டும் அனுமதி,*


*விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்கள் சந்தேகங்களை கேட்கலாம். - தமிழக அரசு உத்தரவு.*


*🙋‍♂விரிவான விளக்கம்*


*🙋‍♂அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணை.*


*🙋‍♂பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்க வேண்டும் அவற்றில் நாளொன்றுக்கு ஒரு பிரிவு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் அதாவது முதல் பிரிவு மாணவர்கள் திங்கள் புதன் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிக்கு வரலாம் அடுத்த பிரிவு மாணவர்கள் செவ்வாய் வியாழன் சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வரவேண்டும்.*


*🙋‍♂ஆசிரியர்களை பொறுத்தவரையில் 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் அவர்களும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் திங்கள் மற்றும் செவ்வாய் வகுப்பு எடுக்க வேண்டும் இரண்டாவது பிரிவு ஆசிரியர்கள் அடுத்த இரண்டு நாட்களில் புதன் மற்றும் வியாழன் பாடம் நடத்த வேண்டும் அதே போல அடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளிக்கு வந்து பாடம் நடத்த வேண்டும்.*


*🙋‍♂பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு தன் விருப்பத்தின் பேரில் ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு பெற பள்ளிக்கு வரலாம் அதுவும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதித்தால் மட்டுமே அக்டோபர் 1ஆம் தேதி முதல் வர அனுமதிக்கப்படுவர்.*


*🙋‍♂இதுவரை ஆன்லைன் மற்றும் தொலைதூரக்கல்வி விடுமுறை போன்ற வகையிலான கற்பித்தல் பணிகள் தொடரலாம்.*


*🙋‍♂அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்.*


*🌎பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு முன்பாக அவர்களுக்கான நேரம் மற்றும் அட்டவணை குறித்து தெரிவிக்க வேண்டும் பள்ளிகளில் நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 50 சதவீத மாணவர்கள் ஒரு வகுப்பில் நாளொன்றுக்கு அனுமதிக்க வேண்டும்.*


*🌎ஆசிரியர்கள் மாணவர்கள் இடையேயான கலந்துரையாடல் என்பது சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும்.*


*🌎பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தரை மற்றும் தளங்களில் குறிப்பிட்ட அளவில் வட்டம் வரைய வேண்டும் அனைத்து பணி நாட்களிலும் சமூக இடைவெளி தான விதிகள் பின்பற்ற வேண்டும்.*


*🌎பள்ளிக்கு வெளியில் மாணவர்களை நிற்க வைக்க கூடாது.*


*🌎கொரோனா தொற்று மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டி இருந்தால் அவர்கள் நலம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டபிறகு வர அனுமதிக்க வேண்டும் அந்த வகை மாணவர்கள் போன் மூலமாகவும் ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்டு பெறலாம்.*


*🌎பள்ளிகளிலும் வகுப்பறைகளிலும் பள்ளி வளாகத்தில் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.*


*🌎ஒருவேளை பள்ளிக்கு வெளியிடங்களில் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடக்க வேண்டி இருந்தால் பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.*


 *🌎விளையாட்டுப்போட்டிகள் இறைவணக்க கூட்டம் போன்ற அதிக கூட்டம் சேரும் நிகழ்வுகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் நீச்சல் குளங்கள் இருந்தால் அவை மூடப்பட வேண்டும்.*


 *🌎பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதற்கு முன்னதாக பள்ளிகளில் உள்ள இருக்கைகள் கைப்பிடிச் சுவர்கள் கதவுகள் ஜன்னல்கள் உள்ளிட்ட பல்வேறுவகை சாதனங்கள் அனைத்தும் சோடியம் ஹைப்போ குளோரைட் மூலம் சுத்தம் செய்ய வேண்டும் இது ஒவ்வொரு நாளும் பள்ளி திறக்கும் முன்பாக செய்ய வேண்டும்.*


 *🌎மாணவர்கள் கைகளை கழுவ வசதியாக சோப்பு மற்றும் தண்ணீர் கைகளுக்கான செய்தார்கள் வைக்க வேண்டும் மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கைகளை கழுவிய பிறகு பள்ளிக்கு நுழைய வேண்டும்.*


*🌎அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகள் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிகளில் தெரியும்படி பேனர்கள் வைக்க வேண்டும்.*


*🌎பயோமெட்ரிக் வருகைப்பதிவு தவிர்க்க வேண்டும் பள்ளிகளில் குளிர்சாதன வசதி களை தவிர்க்க வேண்டும்.*


 *🌎ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் ஒருவருக்கு ஒருவர் தொட்டுக் கொள்வது தவிர்க்க வேண்டும் எச்சில் துப்புவதும் தவிர்க்க வேண்டும்.*


🌎 *இரும்புதல் தும்முதல் போன்ற தவிர்க்க முடியாத நிகழ்வுகளில் வாய் மற்றும் முகத்தை மறைத்து இருமும் போதும் தும்மும் அதற்காக கைக்குட்டை திசு தாள்கள் ஒருமுறை பயன்படுத்தும் காகிதங்களை பயன்படுத்த வேண்டும்.*


🌎 *பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வெப்பநிலை அறியும் கருவியை கொண்டு சோதிக்க வேண்டும்.*


🌎 *மாணவ மாணவியருக்கான செய்முறை பயிற்சிகள் சோதனை அறையில் செய்ய வேண்டி இருந்தால் அதிகபட்சமாக ஒரு செய்முறையில் எந்த அளவுக்கு மாணவர்கள் தேவையோ அவர்களை அனுமதித்து அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ள வேண்டும் அப்போதும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.*


*🌎*உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்கள் உடனடியாக மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் அந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தால் அவர் இருந்த பகுதி அல்லது வளாகத்தை உடனடியாக சுத்தகரிப்பு செய்ய வேண்டும்.*


No comments:

Post a Comment