Thursday 30 July 2020

மேல்மலையனூர் வட்டாரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இணைய வழி கல்வி தொடக்கம் மேல்மலையனூர், ஜூலை.31 மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவி களுக்கு இணைய வழி கல்வி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கி கல்வி அலுவலத்தில் இருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.மேல்மலையனூர் வட்டார கல்வி அலுவலர் சிவக்கு மார் வரவேற்றார். பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜமுனா, தலைமை ஆசிரியர்கள் பரசுராமன், மகேஸ்வரி, ஆசிரியர், மனோகர் ஆசிரியர் சீதா ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு இணைய வழி கல்வி மூலம் பயிற்சி அளித்தனர். முடிவில் தலைமை ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.





No comments:

Post a Comment