Saturday 28 November 2020

தனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு. தனி ஊதியம் 750 பெறுவது குறித்த வழக்கின் தீர்பாணைகள் வழக்கை தொடுத்தவர்களுக்கே பொருந்தும் . தீர்பாணையில் பெயரில்லாதவர்கள் பெற இயலாது . தனி ஊதியம் 1.1.2006 முதல் பெற ஏற்கனவே பெற்ற தீர்பாணைகளை காட்டி வழக்கு தொடுத்து பெறுவதே தனி நபர்களுக்கு தீர்வாகும்.. ஆகவே ஒருவர் பெற்ற தீர்பாணை அனைவருக்கும் பொருந்தாது. இப்போது நாம் பார்க்கும் தீர்பாணைகள் 2014 ல் வழக்கு தொடுத்து 2018 ல் தீர்ப்பு பெற்ற கரூர் தான்தோன்றிமலை ஒன்றிய சந்திரமோகன் என்பவர் பெற்ற ஆணையை ஒட்டி 2015ல் வழக்காடி 2020 ல் பெறப்பட்ட முத்துப்பாண்டி என்பவரின் ஆணை . தீர்பாணைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்டோர் நீதிமன்றத்தில் பரிகாரம் பெறலாம்.




CLICK HERE TO DOWNLOAD JUDGEMENT COPY PDF 1


CLICK HERE TO DOWNLOAD JUDGEMENT COPY PDF 2

No comments:

Post a Comment